Category இலங்கை

3 மாதங்களில் 1,250 முறைப்பாடுகள் – பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் கைது

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.  ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள்…

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் உயிரிழப்பு

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் உயிரிழப்பு ஆதீரா Monday, May 05, 2025 இலங்கை கல்கிஸை – கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் ​மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தெஹிவளை…

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  காலை 6 மணி முதல் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக…

இந்தியா மீது அணுகுண்டு:பாகிஸ்தான்!

பாகிஸ்தான் எல்லையில் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இஸ்லாமாபாத்திற்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவிற்கான பாகிஸ்தான்  உயர்மட்ட தூதர்  முகமது காலித் ஜமாலி, தெரிவித்துள்ளார்.  அவ்வாறு இந்தியாவால் தாக்கப்பட்டால் அல்லது   பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை சீர்குலைத்தால், இஸ்லாமாபாத் அணு ஆயுதங்கள் உட்பட அதன் முழு இராணுவ ஆயுதங்களையும் பயன்படுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின்…

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால…

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க, வாக்குச் சாவடிப் பொறுப்பதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் பிரகாரம் ஓரளவுக்கு கண்பார்வை மங்கிய அல்லது கண்பார்வையற்ற நபர்கள் தங்கள் வாக்குகளை சுயமாக செலுத்தும்…

தேர்தல் கண்காணிப்புக்கு வெளிநாட்டுக் குழுக்கள் இல்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.  அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த…

06ஆம் , 07ஆம் திகதிகளில் சேவைகள் இடம்பெற மாட்டாது.

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்களை பதிவுச் செய்யும் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.…

1500 ரூபாய் இலஞ்சம் பெற்றவர் கைது

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த நபரின் முறைப்பாட்டின் பேரில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியன்று, செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் கொம்பனித்தெரு ரயில் நிலையம் வழியாக…

கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தினுள் நடந்த தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான 08 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் விதி மீறல் தொடர்பான…