Category இந்தியா

இலங்கை வரும் மோடி

இலங்கை வரும் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இருப்பினும், விஜயம் குறித்த திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.  இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயமும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெண்ணின் தாலியை பறித்த சென்னை அதிகாரிகள் – நீதிமன்ற உத்தரவுக்கமைய திருப்பி கொடுத்தனர்.

இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர்.  இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார்.  இதன்போது சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த…

ரணில் மீண்டும் டெல்லிக்கு காவடி!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் மூண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மாநாடு இடம்பெற்றிருந்தது. இதன்போது தெற்காசியா குறித்த சொற்பொழிவை…

உதரகாண்டில் பனிச்சரிவில் சிக்கிய 57 ஊழியர்கள்: 10 பேர் இதுவரை மீட்பு!

இந்தோ-திபெத் எல்லை அருகே உள்ள உத்தரகண்டில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் 57 சாலைத் தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலம் மனாவில் உள்ள எல்லை சாலைகள்…

இந்தியா வந்த ஐரோப்பிய ஆணையாளர்!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுடனான வணிக மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வியாழக்கிழமை இந்தியா வந்தார். ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்ட ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், வாஷிங்டன் அறிவித்த கட்டணங்களை எதிர்கொள்ளும் வகையில் மூலோபாய சீரமைப்பை…

பாக்கு நீரிணையில் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும்

பாக்கு நீரிணையில் இருநாடுகளினதும் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும். அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலில் தாராளமாக நாட் கணக்காக நங்கூரம் இட்டு நின்று மீன் பிடிக்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி . வி விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த கடிதத்தில் மேலும்…

அத்துமீறல்களை கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய, தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே…

மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு

மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு தலைமன்னாரில் இருந்துஅகதிகளாக நால்வர் புறப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.  கடலில் தத்தளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை…

அதானியை விட பொருத்தமான ஆட்கள் உண்டு!

அதானியை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக அனுர அரசு உண்மையினை வெளியிட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என மின்சக்தி அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் அதானி நிறுவனம் திட்டத்திலிருந்து…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 22ஆம் திகதி ஆரம்பம்?

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.  எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை…