Category இத்தாலி

போப் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்

போப் பிரான்சிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்துவெளியேறுவார் என்றும், வத்திக்கானில் குறைந்தது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 88 வயதான அவர் பிப்ரவரி 14 ஆம் திகதி கடுமையான சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் விளைவாக இரட்டை நிமோனியா ஏற்பட்டது.…

மக்கள் முன் நாளை தோன்றுகிறார் போப் பிரான்சிஸ்

நாளை ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் வேளையில் மருத்துவமனை ஜன்னலுக்கு வந்து வாழ்த்து மற்றும் ஆசீர்வாதம் வழங்க பிரான்சிஸ் விரும்புகிறார்” என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.  போப் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வாராந்திர நண்பகல் பிரார்த்தனை செய்வார், ஆனால் பிப்ரவரி 9 முதல் மருத்துவமனைக்குச் சென்றதிலிருந்து  அதை அவரால் செய்ய முடியவில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமை…

மருத்துவமனையில் இருக்கும் போப்பின் புகைப்படம் வெளியானது

ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் முதல் படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. நிமோனியாவிலிருந்து மீண்டு வரும் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையின் ஒரு தேவாலயத்தில் உள்ள பலிபீடத்தின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் போப்பாண்டவரை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. தனது நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, போரினால் பாதிக்கப்படும் நாடுகளின் அமைதிக்காகவும் பிரார்த்தனை…

மருத்துவமனை படுக்கையிலிருந்து உலக அமைதிக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக நான் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். போர் இன்னும் அபத்தமாகத் தோன்றுகிறது என்று இரட்டை நிமோனியாவுடன் போராடிவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  உலக அமைதிக்கு அழைப்பு விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது வழக்கமான மக்கள் தோன்றி பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக எழுத்துபூர்வமான உரையை வழங்கினார். உலகெங்கிலும் உள்ள மோதல்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு 88 வயதான…

சுவாசப் பிரச்சினை: போப் அமைதியான இரவை கழித்தார்

இரண்டு வாரங்களாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸுக்கு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இருமல் மூச்சுக்குழாய் பிடிப்புக்குப் பின்னர் வாந்தி மற்றும் அவரது சுவாச நிலை திடீரென மோசமடைந்தது. 88 வயதான அவருக்கு சுவாசிக்க உதவும் வகையில் செயற்கைச் சுவாசம் மூலம் ஒட்சிசன் செலுத்தப்பட்டது. போப்…

போப் பிரான்சிஸ் நல்ல மனநிலையில் இருக்கிறார்: வத்திக்கான்

போப் பிரான்சிஸ் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், வழக்கம் போல் சாப்பிடுவதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போப் பிரான்சிஸ் குறித்து இன்று திங்கட்கிழமை வத்திக்கான் ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டது. அதில் அறிக்கையில், போப்பாண்டவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்கிறார் என்றும் நேற்றிரவு இரவு நன்றாகச் சென்றது என்றும் கூறியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான்…

போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம்

இரட்டை நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் மேலும் அவரது இரத்த பகுப்பாய்வுகள் சீராக உள்ளன. அவரது இதயத்துடிப்புகள் நிலையாக உள்ளன என்று என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார். போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும்,…

போப்பின் மருத்துவ நிலை மேலும் கிசிற்சையை சிக்கலாக்கிறது

போப் பிரான்சிஸுக்கு இரட்டை நிமோனியா தொடங்கியுள்ளதாக வத்திக்கான் செவ்வாயன்று கூறியது, இது 88 ஆண்டுகால போப்பாண்டவரின் சிகிச்சையை சிக்கலாக்குகிறது மற்றும் அவரது பலவீனமான உடல்நிலை மேலும் மோசமடைவதைக் குறிக்கிறது. பிரான்சிஸ் ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார் , பிப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை பிற்பகல்…

மருத்துவமனையில் போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை ரோமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் தொடர்ந்து மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சை பெற்று வருவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான அவர் தனது காலைப் பார்வைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வத்திக்கான் மேலும் கூறியது. பிரான்சிஸ் சில தேவையான நோயறிதல் பரிசோதனைகளுக்காகவும், மூச்சுக்குழாய் அழற்சிக்கான சிகிச்சையைத் தொடரவும் பாலிக்ளினிகோ அகோஸ்டினோ ஜெமெல்லியில்…