Category யாழ்ப்பாணம்

அரச உத்தியோகஸ்தர்கள் சகல விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும்

அரசாங்கம் எண்ணிமப்படுத்தலை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு எமது அலுவலர்களை நாங்கள் இப்போதே தயார்படுத்தி முன்மாதிரியாக செயற்படவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண பிரதம…

வடக்கு முதலீட்டு வலயங்கள் தொடர்பில் வூசூ அமைப்புக்கு தெரியப்படுத்திய ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும், இதற்குரிய மனிதவளத்தை தயார் செய்யவேண்டியுள்ளமை தொடர்பிலும் வூசூ அமைப்பினருக்கு வடமாகாண ஆளுநர் எடுத்துக்கூறியுள்ளார். வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கவுள்ள தொழில்வழிகாட்டல் மற்றும் தொழில்திறன் வலுவூட்டல் திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், வூசூ (WUSC) அமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்…

பருத்தித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவையிடம்

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவாகியுள்ளார் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.…

பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசிடம்

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில்  நடைபெற்றது. 20 உறுப்பினர்களை கொண்ட…

யாழ். மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்

யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என இந்திய துணைத் தூதுவர், யாழ் . மாநகர முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.  இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மதிவதானி விவேகானந்தராஜாவை நேற்றைய தினம் சந்தித்தார். இந்திய்ய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில் எவ்வாறு…

தமிழரசு :தீவகம் தனி வழி!

 தமிழரசின் சுமந்திரன்; -சீ.வீ.கே சிவஞானம் அணியினை தாண்டி தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. தீவகத் தொகுதிக்குட்பட்ட நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதை மக்கள் விரும்பவில்லை .அதனால் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  மூன்று சபைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்கமாகத்…

இளங்குமரனின் புதிய வெடி:அம்மனை ஒரு நாள் தரிசிக்கலாம்

பெரும்பிரச்சாரங்களுடன் விடுவிக்கப்பட்ட பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள ராஜ ராஜேஸ்வரி   அம்மன்  ஆலயத்திற்கு செல்ல முழுமையான  அனுமதி இன்னமும்  வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழமையான நடைமுறையில்; இராணுவ சோதனைச்சாவடிகளில் பதிவு நடவடிக்கை மேற்கொண்ட பின்னரே  வெள்ளிக்கிழமை மற்றும் விசேட நாட்களில் பூசைகள் செய்வதாயின் அனுமதி பெற்றுச் செல்லலாம். ஆதனை விடுத்து கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக…

வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர்

வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர் ஆதீரா Monday, June 16, 2025 யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.  அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள்…

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம்

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்த்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துடையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு…

யாழில். மதுபான சாலையில் கைக்கலப்பு – முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்ற நபர்

கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள மதுபாண சாலையில் கைக்கலப்பில் ஈடுபட்டவர்கள், வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மதுபான சாலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திக் கொண்ட இரு தரப்பினர்கள் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து, மதுபான சாலை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து,…