Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தனது மூன்று பிள்ளைகளும் அடுத்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் , மூன்று பிள்ளைகளையும் கடந்த 16 வருட காலமாக தேடி வருவதாக தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்தார் கிளிநொச்சி கண்டாவளை பகுதியை சேர்ந்த வைரமுத்து நிரஞ்சனாதேவி என்பவரின் மகன்களான ,…
யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19…
யாழ் பல்கலைக்கழத்தில் தமிழின அழிப்பின் பதாதைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக பல்கலைக்கழக முன்றலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும் , தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீவிகே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர்…
பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர். பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை சாவகச்சேரி பொலிஸார் கனகம்புளியடி சந்தி பகுதியில் வழி மறுத்துள்ளனர். அதன் போது டிப்பர் வாகனத்தினை நிறுத்தாது , அதன் சாரதி டிப்பர் வாகனத்துடன் தப்பியோடியுள்ளார். அதனை…
மணல் ஏற்றி செல்வதற்கான அனுமதி பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் 03 டிப்பர் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னர் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்த மூன்று டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்தது சோதனையிட்டனர். அதன் போது, தரை மணலை…
அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள “அணையா விளக்கு” போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்றைய தினம் புதன்கிழமை காலை 10.10 மணியளவில் சுடரேற்றல் உடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை தொடர்ந்து மலரஞ்சலி…
அணையா விளக்கு நினைவேந்தலில் இனப்படுகொலையாளர்களது பங்காளிகள் பங்கெடுக்க கூடாதென தவத்திரு வேலன்சுவாமிகள் தெரிவித்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.அவ்வறிவிப்பு அண்மையில் ஈபிடிபியுடன் கைகோர்த்த சுமந்திரன் ஆதரவாளர்களை சீற்றமுற வைத்துள்ளது. இந்நிலையில் இறுதி யுத்த வெற்றியில் தமக்கும் பங்குண்டு என்று கூறிய புளொட் இயக்க உறுப்பினர்களை அணையா விளக்கு நிகழ்ச்சியில் வைத்து வரவேற்று ஆசிவழங்கிய தவத்திரு வேலன் சுவாமிகள்…
யாழ்ப்பாணத்திற்கு நாளை பயணம் செய்யலாமென எதிர்பார்க்கப்படும் ஜநா மனித உரிமைகள் ஆணையர் செம்மணி புதைகுழிக்கு பயணிப்பாராவென்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும் செம்மணி புதைகுழி பகுதி முழுமையாக இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது செம்மணியில் மேலுமொரு…