Category முதன்மைச் செய்திகள்

கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலாச்சாரப் பொருட்கள் ஐரோப்பியக் காவல்துறையினரால் பறிமுதல்

கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலாச்சாரப் பொருட்களை ஐரோப்பிய போலீசார் பறிமுதல் செய்தனர். 23 நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க மற்றும் சுங்க அதிகாரிகள் பண்டோரா IX என்ற நடவடிக்கையில் பங்கேற்றனர். கலைப்படைப்புகள், நாணயங்கள், ஓவியங்கள் மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உட்பட ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களை அதிகாரிகள் மீட்டனர். சர்வதேச கலாச்சார சொத்து திருட்டுக்கு எதிரான போராட்டத்தில் 23 நாடுகளில்…

தமிழின அழிப்பு நினைவகம்: கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன்நன்றி தெரிவிப்பு

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும்…

பிரதமருடனான சந்திப்பில் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்துவேன் – கஜேந்திரகுமார்

பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு,…

பள்ளிக் குழந்தைகளின் பேருந்து மீது தாக்குதல்: 4 சிறார்கள் பலி: 38 சிறார்கள் படுகாயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தை குறிவைத்து இன்று புதன்கிழமை (மே 21) நடத்தப்பட்ட தற்கொலைக் கார் குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. குஜ்தார் துணை ஆணையர் யாசிர்…

'கோல்டன் டோம்' ஏவுகணை கேடயத்தை எதிர்பார்க்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை, உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து, இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டார். கோல்டன் டோம் ஏவுகணைகள் உலகின் பிற பக்கங்களிலிருந்து ஏவப்பட்டாலும், விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.  தனது “கோல்டன் டோம்” $175…

அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (20) அந்தந்த தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ…

காசா விவகாரத்தில் இஸ்ரேல் மீது நடவடிக்கை: இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் மிரட்டல்!

காசாவில் இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால் உறுதியான நடவடிக்கைகளை இஸ்ரேல் மீது எடுப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. அத்துடன் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி மற்றும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள்…

காணி சுவீகரிப்பு – தமிழர் தேசத்தின் மற்றொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட,…

டிரம்ப் – புடின் தொலைபேசி உரையாடல்: இருதரப்பும் என்ன கூறுகின்றனர்?

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தனது அழைப்பு மிகவும் சிறப்பாக நடந்ததாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் தெரிவித்தார். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் மிக முக்கியமாக, போரை…

கனடாவின் நினைவுத்தூபி சர்வதேசத்துக்கு நின்றுகூறும் செய்தியும் அநுர குமரவின் அதிகார ஆணவப் பேச்சும்! பனங்காட்டான்

இலங்கையில் இரண்டு தடவை பயங்கரவாதம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து, இரண்டு தடவைகளும் தடைசெய்யப்பட்டு, சிங்கள அரசியல் கட்சிகளின் சீர்கேட்டினால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி தனது திட்டம் என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இவைகள் முழுமையாக செயற்படுத்தப்படுமானால் இந்து சமுத்திரத்தின் குட்டித்தீவு தேர்தல்களற்ற,…