Category ஐரோப்பா

யேர்மனியின் நாடாளுமன்றில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில்  பிரீட்ரிக் மெர்ஸ் புதிய சான்ஸ்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்குப் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. இரண்டாவது சுற்று வாக்களிப்பில் அவர் பெரும்பாண்மையை நிறுவியதால் அவர் யேர்மனியின் சான்ஸ்சிலராப் பதவியேற்றார். பிரீட்ரிக் மெர்ஸ் தனது பதவிக் காலத்தை அண்டை நாடுகளுக்குச் சென்று தனது பிரெஞ்சு மற்றும் போலந்து சகாக்களைச்…

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கைக்கான விசாக்களைக் கடுமையாக்கும் பிரித்தானியா

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கலாம்என்று உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். வேலை அல்லது படிப்பு விசாக்களில் சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு வந்து பின்னர் புகலிடம் கோருபவர்களுடன் ஒரு குறிப்பிட்ட சிக்கல் இருப்பதாக அமைச்சர்கள் நம்புகின்றனர். இந்த வகை விசா…

அதிர்ச்சியல் ஃபிரெட்ரிக் மெர்ஸ்: வாக்கெடுப்பில் பெரும்பாண்மை கிடைக்கவில்லை!

யேர்மனியில் அரசாங்கம் அமைப்பதற்கான கூட்டணி ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை யேர்மனியின் பாராளுமன்றில் சான்ஸ்சிலரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தமாக உள்ள 630 இடங்களில் இன்றைய வாக்கெடுப்பில்  ஃபிரெட்ரிக் மெர்ஸுக்கு 316 வாக்குகள் தேவைப்பட்டன. ஆனால் அவருக்கு 310 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது யேர்மனியின் கூட்டாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று…

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் மின்சாரம் துண்டிப்பு: காரணம் தெரியவில்லை!!

இன்று திங்கட்கிழமை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.  போர்ச்சுகலில், உள்ளூர் நேரப்படி அதிகாலையில் ஏற்பட்ட மின்வெட்டு நாடு தழுவியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உள்நாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்தன. அதே நேரத்தில் ஸ்பெயினிலிருந்தும் இதே போன்ற தகவல்கள் வெளிவந்தன. மாட்ரிட்டின் பராஜாஸ் சர்வதேச விமான…

ஐரோப்பாவில் ஆப்பிள் மற்றும் மெட்டாவுக்கு €700 மில்லியன் அபராதம் விதிப்பு

டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மெட்டாவிற்கு ஐரோப்பிய ஆணையம் மில்லியன் கணக்கான அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் (DMA) கீழ் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மெட்டா ஆகியவை கடமைகளை மீறியதாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை கண்டறிந்து , இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் முறையே €500…

இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதிகளைத் தாக்கியது புயல்!

நேற்று வெள்ளிக்கிழமை வீசிய புயல் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இத்தாலியில் கனமழையால் மக்கள் உயிரிழந்துள்ளனர், ஈஸ்டர் விடுமுறைக்காக பயணிகள் பயணங்களை மேற்கொள்வதால் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் பனிப்புயல் காரணமாக இடையூறுகளை எதிர்கொள்கின்றன. இத்தாலி வடக்கு இத்தாலியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

சட்டவிரோதமான நிலத்தடி துப்பாக்கிச் சூட்டுத் தளம் கண்டுபிடிப்பு

ஸ்பெயினின் தெற்கு மாகாணமான கிரனாடாவில் உள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத நிலத்தடி துப்பாக்கிச் சூடு தளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தும் மூன்று தளங்களை அங்கே அமைந்திருந்தன. துப்பாக்கிச்சூடு நடத்தும் தளத்தின் ஆழம் காரணமாக அருகில் உள்ள வீட்டு நபர்களால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தை செவிமடுக்கமுடியவில்லை. இந்த நடவடிக்கையின் போது…

இந்த 7 நாடுகளும் பாதுகாப்பானது: புகலிடக் கோரிக்கைகளையும் கடுமையாக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியம் 7 பாதுகாப்பான நாடுகளின் பட்டியலுடன் புகலிட விதியை கடுமையாக்குகிறது. மக்கள் தங்குவதற்கு அல்லது திரும்புவதற்கு பாதுகாப்பானது என்று கருதும் ஏழு நாடுகளின் பட்டியலை பிரஸ்ஸல்ஸ் வெளியிட்டுள்ளது.  இந்தப் பட்டியலில் கொசோவோ, பங்களாதேஷ், கொலம்பியா, எகிப்து, இந்தியா, மொராக்கோ மற்றும் துனிசியா ஆகியவை அடங்குகின்றன. கொசோவோ, பங்களாதேஷ், கொலம்பியா, எகிப்து, இந்தியா, மொராக்கோ மற்றும்…

ஆஸ்திரியாவில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெரிய ரோமானிய கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது

ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  ஒரு பெரிய ரோமானிய கல்லறையில் சுமார் நூற்றியம்பது வீரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர். அக்டோபர் மாதம் சிம்மரிங் குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதியில் ஒரு கால்பந்து மைதானத்தை புதுப்பிப்பதற்கான கட்டுமானப் பணியின் போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது, ​​நிபுணர் பகுப்பாய்வைத் தொடர்ந்து, இந்த எச்சங்கள்…

ஐரோப்பாவில் ஐந்து நாடுகளில் போதைப் பொருளுக்கு எதிரான சோதனைகள்!

ஐரோப்பா முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று வியாழக்கிழமை காலை முதல் ஐந்து நாடுகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களில் காவல்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றன. யேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து மற்றும் ஸ்பெயினில் சந்தேக நபர்களுக்கு பதினொரு கைது பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக யேர்மன் சட்ட அமலாக்க அதிகாரிகள் அறிவித்தனர். மேலும்…