மதுரையில் சவால்களை சமாளித்து ஓராண்டை நிறைவு செய்த மாநகாரட்சி ஆணையர் சித்ரா!

Download 3 1

3 ஆண்டுகளில் 5 ஆணையர்கள் மாற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா, நேற்றுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் தலையீடு, மேயர் மாற்றம், சொத்துவரி முறைகேடு என பல சிக்கல்கள் தொடர்கின்றன. இதனால், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025 வரை, 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேயர் இந்திராணி பொறுப் பேற்கும் முன்னர், கார்த்திகேயன் ஆணையராக இருந்தார். அவர் 2021-ம் ஆண்டு, ஜூன் 14-ல் பொறுப்பேற்று 2022 மே 31-ல் மாற்றப்பட்டார். சிம்ரன்ஜீத் சிங் காலோன், 2022-ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2023 ஜூன் 6-வரை பணியாற்றினார்.

பின்னர் தற்போது மதுரை ஆட்சியராக இருக்கும் பிரவீன்குமார், ஆணையராக 2023-ம் ஆண்டு ஜூன் 9-ல் பொறுப்பேற்று, 4 மாதங்களில் அக்.18-ல் மாற்றப்பட்டார். மதுபாலன், 2023-ம் ஆண்டு டிசம்பர் 19-ல் பொறுப்பேற்ற நிலையில், 2024 பிப்.11-ல் மாற்றப்பட்டார்.

தினேஷ்குமார், 2024 பிப். 12-ல் பொறுப்பேற்று, ஓர் ஆண்டை நிறைவு செய்வதற்குள், 2025 பிப். 2-ம் தேதி கிருஷ்ணகிரி ஆட்சியராக பதவி உயர்வில் சென்றார். உள்ளூர் அமைச்சர்கள், மேயர், கவுன்சிலர்கள் அரசியல் நெருக்கடியையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியாமலேயே ஆணையராக வந்தவர்கள், அவர்களே இடமாறுதல் கேட்டுச் சென்றனர்.

சிலர் ஆளுங்கட்சியினரால் கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் மதுரை மாநகராட்சிக்கு ஆணையராக வருவதற்கே ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் தயக்கம் இருந்தது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக சித்ரா, கடந்த 2025-ம் ஆண்டு பிப்.3-ம் தேதி பொறுப்பேற்றார்.

சில மாதங்களில் மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரம் சூடுபிடித்து இதுவரை ஆணையர்களாக இருந்தவர்களுக்கு இல்லாத அரசியல் நெருக்கடி சித்ராவுக்கு ஏற்பட்டது. ஆனால், எந்த அரசியல் நெருக்கடிக்கும், சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் இந்த முறைகேடு விவகாரத்தை மிக நேர்மையாக விசாரித்து, உள்ளூர் அமைச்சர்கள் முதல் தமிழக அரசின் பாராட்டை பெற்றார்.

உதவி ஆணையர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் 28 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்ததோடு, சொத்துவரி முறைகேடுக்கு அடித்தளமான கட்டிட அனுமதி, வரிவசூலில் துணிச்சலாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாண்டு தீர்வு கண்டார்.

சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் திமுக தலைமை மேயர் இந்திராணி முதல் ஐந்து மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிகளை பறித்தது. அதன்பின்னர் கடந்த 4 மாதங்களாக மேயர், மண்டலத் தலைவர்கள் இல்லாமலேயே மாநகராட்சி நிர்வாகத்தை ஆணையர் சிறப்பாக மேற்கொண்டு வருவதை அறிந்து, இவரது தலைமையிலேயே மாநகராட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேயர் இல்லாததால், ஆளுங்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் அரசியல் அழுத்தங்களை சமாளித்து, ஆணையர் சித்ரா, மாநகராட்சி பள்ளிகள், வருவாய், நிர்வாகம், சுகாதாரம், நகரமைப்பு துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Bike20202520Uk202026020422 2

பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700
மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன.
பிரான்சில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதும் அதற்கு மத்தியில் பலரும் கலந்துகொண்டு கைகளில் தமிழீழத் தேசியக் கொடி மற்றும் கறுப்புக் கொடிகளை ஏந்தித் தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.
நிறைவாகத் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.

Read more
Jjkkk2004 02 20262022 43 19

https://www.pathivu.com/2026/02/blog-post_317.html

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்த நேரம் முடிந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் புதிய START என அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இன்று புதன்கிழமை கிழக்கு நிலையான நேரப்படி (0500 வியாழன் UTC) இறுதிக்குள் காலாவதியாக உள்ளது.
போப் லியோ XIV உட்பட முக்கிய உலகத் தலைவர்கள் ஒப்பந்தத்தின் நீட்டிப்பு அல்லது பாதுகாப்பிற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
START என்பது மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தைக் குறிக்கிறது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மிகச் சமீபத்திய இருதரப்பு ஒப்பந்தம் 2010 ஆம் ஆண்டு பராக் ஒபாமா மற்றும் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதிகளாக கையெழுத்திடப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி குறைப்பு குறித்த மீதமுள்ள கடைசி ஒப்பந்தமாகும். இதுபோன்ற முதல் ஏற்பாட்டை 1972 இல் கையெழுத்திட்ட மூலோபாய ஆயுத வரம்பு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் (SALT-I) காணலாம்.
புதிய START ஒப்பந்தம், பயன்படுத்தப்பட்ட மூலோபாய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை ஒவ்வொன்றும் 1,550 ஆகவும், மூலோபாய விநியோக வாகனங்கள் மற்றும் அமைப்புகளின் எ..

Read more
London20Protest2028229

ஈழத்தமிழர்களுக்கு கரிநாள் – இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள்
மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை முன்னெடுத்திருந்தனர் .

Read more
Ct20Scan

தவறான நோயறிதல்: நுழையீரல் அகற்றப்பட்டது!

தவறான நோயறிதலுக்குப் பின்னர் பெண்ணின் ஆரோக்கியமான நுரையீரல் அகற்றப்பட்டது.ஆஸ்திரிய நாட்டின் ஸ்டைரியாவைச் சேர்ந்த 48 வயது பெண்மணியின் நுரையீரல் பகுதி தவறான புற்றுநோய் இருப்பதான நோயறிதலைத் தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது.
மற்றொரு தவறான புற்றுநோய் நோயறிதல் ஆஸ்திரிய சுகாதார அமைப்பை உலுக்கியுள்ளது.
அந்தப் பெண் செப்டம்பர் 2024 இல் காய்ச்சல், சளி மற்றும் கடுமையான உடல் பலவீனத்துடன் கிராஸ் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மார்பின் CT ஸ்கேன் எடுக்க உத்தரவிட்டனர். இது அழற்சி மாற்றங்களைக் காட்டியது. ஆனால் கட்டி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை.
இருப்பினும், ஒரு திசு மாதிரி எடுக்கப்பட்டது. ஹிஸ்டாலஜிக்கல்-நோயியல் கண்டுபிடிப்புகள் அடினோகார்சினோமா, அதாவது நுரையீரல் புற்றுநோய். வழங்கப்பட்ட தகவல்களின்படி, மருத்துவர்கள் விரைவான நடவடிக்கையை அறிவுறுத்தினர் மற்றும் உடனடி அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
அறுவை சிகிச்சை இறுதியாக ஒரு தனியார் மருத்துவ..

Read more
Miss2

3271நாட்களாக நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம்!

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாளை (பெப்ரவரி 04ஆம் திகதியை) , காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.
சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இன்றைய தினம் சுதந்திர தினம் அல்ல. எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில்,வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம். மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை.
ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. அவ்வகையில் இலங்கை சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more