விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்
அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…
Read moreலிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…
Read more
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தின் மூத்த கல்வியாளர்களுள் ஒருவரான முனைவர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். இராஜகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆசிரியராகத் தமது கல்விப் பணியைத் தொடங்கிய அவர் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலியினைத் செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மருத்துவ ஆய்வுக்காக உடல்’ – சென்னை க..
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் புத்தகம் விற்கப்படவில்லை: காவல் துறை அறிக்கை
சென்னையில் நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் விற்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் சென்னை நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படும் என இணையதளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி குறித்து தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தக கண்காட்சியில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது..
கமலின் பெயர், புகைப்படம் வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம் வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் அனுமதியின்றி அவரின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தவறான முகவரி என திரும்ப வந்துள்ளதாக கூறினார்.
அதன் காரணமாக மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். வழக்கு தொடர்பாக தமிழ் நாளிதழில் விளம்பரம்..
மதுரையில் சவால்களை சமாளித்து ஓராண்டை நிறைவு செய்த மாநகாரட்சி ஆணையர் சித்ரா!
3 ஆண்டுகளில் 5 ஆணையர்கள் மாற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா, நேற்றுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் தலையீடு, மேயர் மாற்றம், சொத்துவரி முறைகேடு என பல சிக்கல்கள் தொடர்கின்றன. இதனால், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025 வரை, 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேயர் இந்திராணி பொறுப் பேற்கும் முன்னர், கார்த்திகேயன் ஆணையராக இருந்தார். அவர் 2021-ம் ஆண்டு, ஜூன் 14-ல் பொறுப்பேற்று 2022 மே 31-ல் மாற்றப்பட்டார். சிம்ரன்ஜீத் சிங் காலோன், 2022-ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2023 ஜூன் 6-வரை பணியாற்றினார்.
பின்னர் தற்போது மதுரை ஆட்சியராக இருக்கும் பிரவீன்குமார், ஆணையராக 2023-ம் ஆண்டு ஜூன் 9-ல் பொறுப்பேற்று, 4 மாதங்களில் அக்.18-ல் மாற்றப்பட்டார். மதுபாலன், 2023-ம் ஆண்டு டிசம்பர் 19-ல் பொறுப்பேற்ற நிலையில், 2024 பிப்.11-ல் மாற்றப்பட்டார்.
தினேஷ்குமார், 2024 பிப். 12-ல் பொறுப்பேற்று, ஓர் ஆண்டை நிறைவு செய்வதற்குள், 2025 பிப். 2-ம் தேதி கிருஷ்ணகிரி ஆட்சியராக பதவி உயர்..
‘தவெகவை ஓட்டை இன்ஜின் என்பதா?’ – அண்ணாமலை மீது நிர்மல்குமார் ஆவேசம்
“தவெகவை ஓட்டை இன்ஜின் என விமர்ச்சித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேவலமானவர். அவர் பற்றி இனிமேல் என்னிடம் கேட்க வேண்டாம்” என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் ஊரக வளர்ச்சித் துறையினர் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கழிப்பறை செல்ல விடாமலும், உணவருந்த செல்ல முடியாமலும் காவல் துறை அடக்குமுறை செய்கின்றனர். அவர்களை காவல் துறை அவதூறாக பேசுகின்றனர்.
இதுபற்றி அந்த துறையின் அமைச்சர் என்ற பெயரில் உதயநிதி, அவர்களை இதுவரைக்கும் அழைத்து பேசவில்லை. பிறப்பால் துணை முதல்வரானவர் அப்படியெல்லாம் பேசமாட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
அதிமுக கூட்டணியை யார் அமைத்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். இதற்கான அறிவிப்புகளை பாஜகவே வெளியிட்டது. என்டிஏ என்றால் பாஜக கூட்டணி தான். இந்தக் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்களோ, அவர்களே கூட்டணிக்கும் தலைமை ..
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணியளவில் (1700 GMT) துப்பாக்கி ஏந்திய நபர்கள் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
மேலும், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 35 சடலங்கள் மீட்கப்பட்டது என்று கைமா பிராந்தியத்தின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அகமது தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்றும், பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலைக் காவல் துறை உறுதிப்படுத்தியது, ஆனால் உயிரிழப்பு விவரங்களை வழங்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று மாநில அரசாங்கம் குற்றம்சாட்டியது.
குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான..
‘எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ – எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா முறையீடு
‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும் நீதி கிடைப்பதில்லை’ என உச்ச நீதிமன்றத்திடம் மம்தா பானர்ஜி முறையிட்டார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.எம்.பஞ்சோலி அமர்வு, மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்டது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவன், தலைமை நீதிபதியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், ‘‘இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் மம்தா பானர்ஜி. நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்தவர் அவர். நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையுடனும், நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் வழக்கங்களுக்கு இணங்கவும் நடந்து கொள்ள அவர் உறுதி அளி..
சுவிட்சர்லாந்தில் மீண்டும் தலைதூக்கும் பழைய மோசடி ஒன்று
சுவிட்சர்லாந்தில், பழைய மோசடி ஒன்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அதிகாரிகள் அது குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.
மீண்டும் தலைதூக்கும் மோசடிசுவிட்சர்லாந்தில், குறிப்பாக, வடமேற்கு சுவிட்சர்லாந்தில், மின்வாரியப் பணியாளர்கள் என தங்களை அறிமுகம் செய்துகொண்டு மீற்றரை பரிசோதிக்கவேண்டும் என்று கூறி சிலர் வீடுகளுக்குள் நுழைகிறார்களாம்.மக்கள் அவர்களை மின்வாரியப் பணியாளர்கள் என நம்பி வீட்டுக்குள் அனுமதிக்க, அந்த நபர்கள் விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுவிடுகிறார்களாம்.
இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள், தங்கள் பணியாளர்கள் எப்போதுமே தெளிவான அடையாள அட்டை அணிந்திருப்பார்கள் என்றும், பணம் கேட்க மாட்டார்கள் என்றும், மக்களுக்கு தொல்லை கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
அத்துடன், பொலிசாரும், முன் நடைபெற்ற இதுபோன்ற மோசடிகள் மீண்டும் தலைதூக்குவது தெரியவந்துள்ளதாகவும், அப்படி யாராவது மின்வாரியப் பணியாளர்கள் என்று கூறி கதவைத் தட்டினால், சந்தேகம் ஏற்பட்டால் கதவைத் திறக்கவேண்டாம் என்றும், பொலிசாரை அழைக்குமாறும் மக்களைக்கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
