விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

மலையகத்தின் பெயரிடல் அரசியல்: வரலாற்றுப் பின்னணியில் சமூகத் தாக்கம் : மருதன் ராம்

இலங்கையின் மலையகச் சமூகம் இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றில் ‘தொண்ட மான்’ என்ற பெயர் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் தற்போதைய ஜீவன் தொண்டமான் வரை ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மலையகப் பிராந்தியத்தில் நீடித்து வருகிறது.

இதன் ஒரு வெளிப்பாடாகவே மலையகத்தில் உள்ள பல அரச நிறுவனங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் தொண்டமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்களில் அங்கம் வகித்த இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான அரச நிறுவனங்களுக்கு தொண்டமானின் பெயரை வைத்துள் ளது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், குறித்த பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தமை பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில், மலையக பிரதிநிதித்துவம் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பான விவாதத்தின் போது இந்த..

Read more
Download 7 1

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தின் மூத்த கல்வியாளர்களுள் ஒருவரான முனைவர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். இராஜகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆசிரியராக‌த் தமது கல்விப் பணியைத் தொடங்கிய‌ அவர் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலியினைத் செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மருத்துவ ஆய்வுக்காக உடல்’ – சென்னை க..

Read more
Img 20260204 142551 0

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” : ஹட்டனில் மக்கள் மாநாடு

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும..

Read more
Download 6 2

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் புத்தகம் விற்கப்படவில்லை: காவல் துறை அறிக்கை

சென்னையில் நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் விற்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் சென்னை நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படும் என இணையதளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி குறித்து தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தக கண்காட்சியில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது..

Read more
Download 5 2

கமலின் பெயர், புகைப்படம் வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம் வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் அனுமதியின்றி அவரின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தவறான முகவரி என திரும்ப வந்துள்ளதாக கூறினார்.
அதன் காரணமாக மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். வழக்கு தொடர்பாக தமிழ் நாளிதழில் விளம்பரம்..

Read more
Download 3 1

மதுரையில் சவால்களை சமாளித்து ஓராண்டை நிறைவு செய்த மாநகாரட்சி ஆணையர் சித்ரா!

3 ஆண்டுகளில் 5 ஆணையர்கள் மாற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா, நேற்றுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் தலையீடு, மேயர் மாற்றம், சொத்துவரி முறைகேடு என பல சிக்கல்கள் தொடர்கின்றன. இதனால், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025 வரை, 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேயர் இந்திராணி பொறுப் பேற்கும் முன்னர், கார்த்திகேயன் ஆணையராக இருந்தார். அவர் 2021-ம் ஆண்டு, ஜூன் 14-ல் பொறுப்பேற்று 2022 மே 31-ல் மாற்றப்பட்டார். சிம்ரன்ஜீத் சிங் காலோன், 2022-ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2023 ஜூன் 6-வரை பணியாற்றினார்.
பின்னர் தற்போது மதுரை ஆட்சியராக இருக்கும் பிரவீன்குமார், ஆணையராக 2023-ம் ஆண்டு ஜூன் 9-ல் பொறுப்பேற்று, 4 மாதங்களில் அக்.18-ல் மாற்றப்பட்டார். மதுபாலன், 2023-ம் ஆண்டு டிசம்பர் 19-ல் பொறுப்பேற்ற நிலையில், 2024 பிப்.11-ல் மாற்றப்பட்டார்.
தினேஷ்குமார், 2024 பிப். 12-ல் பொறுப்பேற்று, ஓர் ஆண்டை நிறைவு செய்வதற்குள், 2025 பிப். 2-ம் தேதி கிருஷ்ணகிரி ஆட்சியராக பதவி உயர்..

Read more
Download 2 1

‘தவெகவை ஓட்டை இன்ஜின் என்பதா?’ – அண்ணாமலை மீது நிர்மல்குமார் ஆவேசம்

“தவெகவை ஓட்டை இன்ஜின் என விமர்ச்சித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேவலமானவர். அவர் பற்றி இனிமேல் என்னிடம் கேட்க வேண்டாம்” என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் ஊரக வளர்ச்சித் துறையினர் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கழிப்பறை செல்ல விடாமலும், உணவருந்த செல்ல முடியாமலும் காவல் துறை அடக்குமுறை செய்கின்றனர். அவர்களை காவல் துறை அவதூறாக பேசுகின்றனர்.
இதுபற்றி அந்த துறையின் அமைச்சர் என்ற பெயரில் உதயநிதி, அவர்களை இதுவரைக்கும் அழைத்து பேசவில்லை. பிறப்பால் துணை முதல்வரானவர் அப்படியெல்லாம் பேசமாட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
அதிமுக கூட்டணியை யார் அமைத்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். இதற்கான அறிவிப்புகளை பாஜகவே வெளியிட்டது. என்டிஏ என்றால் பாஜக கூட்டணி தான். இந்தக் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்களோ, அவர்களே கூட்டணிக்கும் தலைமை ..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

“நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறிதரன் உள்ளிட்டோர் உதவ வேண்டும்” : அரசாங்கம் தெரிவிப்பு

நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்”.
“அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்ற..

Read more