தமிழர் தேசமெங்கும் கரிநாள்!

தமிழர்-தேசமெங்கும்-கரிநாள்!


இலங்கையின் 78ஆவது சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி  இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள்,தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட  பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.ஆர்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியிருந்தனர்.அத்தோடு,தமிழ் இனப்பிரச்சிற்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழர்தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியவாறு,பாதைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட  பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.அதேவேளை “சிங்ககொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனக் கோசங்களை எழுப்பியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட  பேரணி முன்னெடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Related Posts

🚫 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த நர்சரி ஊழியர்: நாளை நாடு கடத்தப்படுகிறார்! – Global Tamil News

லண்டன் நர்சரி பள்ளியில் 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோக்சானா லெக்கா (Roksana Lecka), நாளை (பெப்ரவரி 5, 2026, வியாழக்கிழமை) லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு லண்டனின்…

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more

🔥 பதுளையில்   தீப்பரவல்: நான்கு பேர் வைத்தியசாலையில்  – Global Tamil News

பதுளை நகரின் வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் இன்று (பெப்ரவரி 4, 2026) இடம்பெற்ற ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கி காயமடைந்த மற்றும் புகைமூட்டத்தினால் மூச்சுத்திணறலுக்கு…

Read more

⛓️ காலி சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் – போதைப்பொருள் மீட்பு! – Global Tamil News

காலி சிறைச்சாலையின் A, B மற்றும் C, D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (பெப்ரவரி 3, 2026) சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 9 கையடக்கத் தொலைபேசிகள், 11 சிம் (SIM) அட்டைகள், 58 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட…

Read more

🚫 அனில் அம்பானி  வெளிநாடு செல்லத் தடை : சிறப்பு புலனாய்வு குழு  அமைக்க உத்தரவு! – Global Tamil News

நிதி முறைகேடுகள் மற்றும் கடன் நிலுவை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, முறையான விசாரணைக்காக SIT (Special Investigation Team) அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது அவர் விசாரணைக்கு…

Read more