78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் செய்தி


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எமது தாய்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.சுதந்திரம் என்பது நீதியை நிலைநாட்டுதல், ஒற்றுமையைப் பேணுதல், பரஸ்பர மரியாதையையும் பொறுப்புணர்வையும் காத்தல் ஆகியவற்றை எம்மிடம் வலியுறுத்தும் ஒரு புனிதமான நம்பிக்கையாகும். பல மதங்களும் பல இனங்களும் இணைந்து வாழும் நாடாகிய இலங்கை, அமைதியான இணைந்த வாழ்வு, உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் தேசிய ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவற்றிற்கான கூட்டு அர்ப்பணிப்பின் மூலமே தனது பலத்தைப் பெறுகிறது.தாய்நாட்டை மதித்தல், நீதியான சட்டங்களைப் பின்பற்றுதல், சமூக நீதியை ஊக்குவித்தல், சமூக நலனுக்காக நேர்மறையாக பங்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இஸ்லாம் போதிக்கிறது. இவ்வுணர்வின் அடிப்படையில், அனைத்து சமூகங்களையும் குறிப்பாக இளைய தலைமுறையினரை நெறிமுறைமிக்க நடத்தை, பன்மைத் தன்மைக்கு மரியாதை, நிலையான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு நாம் அழைக்கின்றோம்.சாதி, இனம், மதம் என்ற பேதமின்றி எமது சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் மேற்கொண்ட அனைத்து துறைகளையும் சேர்ந்த தலைவர்களையும் தேசபக்தர்களையும் ஆழ்ந்த நன்றியுடன் இந்நாளில் நினைவுகூருகின்றோம்.எமது முன்னோர்கள், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சுதந்திரத்தை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கும், மரியாதை, கௌரவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தை கனவுகண்டு, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது உழைத்தனர்.இந்தச் சூழலில், நவீன உலகளாவிய அபிவிருத்திகளுடன் ஒற்றுமையோடு நாட்டை முன்னோக்கி வழிநடத்தும் அதே வேளையில், இந்த நாட்டின் மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கங்களுக்கு உள்ளது.இந்த நாட்டின் குடிமக்களாகிய நாம் அனைவரும், எதிர்காலத் தலைமுறைகளுக்காக எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த விலைமதிப்பற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் ஒன்றிணைந்து பாடுபடுவோமாக.சர்வ வல்லமை பெற்ற அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எமது தாய்நாட்டிற்கு நீடித்த அமைதி, நிலைத்த தன்மை, ஒற்றுமை மற்றும் செழிப்பை அருள்வானாக!முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்விதலைவர்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாஅஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்பொதுச் செயலாளார்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

கிறீஸ்-கடலோர-காவல்படை-கப்பல்-புலம்பெயர்ந்தோர்-படகுடன்-மோதியதில்-14-பேர்-உயிரிழந்தனர்.

கிறீஸ் கடலோர காவல்படை கப்பல் புலம்பெயர்ந்தோர் படகுடன் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சியோஸ் தீவின் கடற்கரையில் ஹெலனிக் கடலோர காவல்படை கப்பலுடன் ஒரு வேகப் படகு மோதியதில் குறைந்தது 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.11 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என 14 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோர…

Read more
g

G

Privacy Policy Contact Us Search முகப்பு மின்னிதழ்இலங்கைஉலகம்இந்தியாசினிமாதொழில்நுட்பம்விளையாட்டுபொழுதுபோக்குஜோதிடம் Homeஇலங்கைசிறப்பு செய்திகள் Nishanthan SubramaniyamFebruary 4, 2026 11:47 am 0நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார்…

Read more

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு. – Global Tamil News

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை  மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்  க.கனகேஸ்வரன்  தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்…

Read more
மன்னாரில்-பணிசில்-பல்லி-எச்சம்!!

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம்!!

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை…

Read more

அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை

Wednesday, February 4, 2026 அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை  இரண்டு கண்டைனர்களில் போதைப்பொருள்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச புலனாய்வு சேவைகள் அறிவித்திருந்தும் அவற்றை விடுவித்ததும் போதைப்பொருள் கண்டைனர் வெளியே சென்ற…

Read more

பெண்ணாக ஆண் எனும் சமூகத்தில்… – இராசகுமார் வினோதன் – Global Tamil News

சமூகம் என்பது மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து, இணைந்து வாழும் ஓர் அமைப்பு. ஆனால், இந்த அமைப்பு வரலாற்றின் பெரும்பகுதியில் சமத்துவமானதாக இருந்ததில்லை. ஆணாதிக்கம் எனும் வேரூன்றிய கருத்தியல், ஆண்களை அதிகாரத்தின் மையத்திலும், பெண்களைக் கட்டுப்பட வேண்டியவர்களாகவும், இரண்டாம் நிலையினராகவும் நிலைநிறுத்தியது. ‘பெண்ணாக…

Read more