இன்றைய வானிலை !


வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (2) அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் சுமார் 50 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Posts

ஐஸ் போதைப்பொருடன் இருவர் கைது

புத்தளம் – மெல்லன்குளம் பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனை நடவடிக்கையின்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 524 கிராம் ஐஸ் போதைப்பொருடன் நேற்று (01) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினர் இப்பாகமுவ பகுதியில்…

Read more

துப்பாக்கி மாயமான சம்பவம் – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

 மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போனதாக நேற்று…

Read more

அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!

 அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான…

Read more
யாழில்.சிறுமியின்-கை-துண்டிக்கப்பட்ட-சம்பவம்-–-மருத்துவர்களை-கைது-செய்ய-பின்னடிக்கும்-பொலிஸார்

யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸார்

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.பொலிசரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கினை குற்ற புலனாய்வு துறையினருக்கு பரப்படுத்த நேரும் எனவும் பொலிஸாருக்கு…

Read more

இஞ்சி விலை கடும் உயர்வு

 உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை  உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோகிராம்  இஞ்சி முன்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட விலையில்  தற்போது   ஒரு கிலோகிராம் இஞ்சி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்வடைந்துள்ளதாக  மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.டிட்வா சூறாவளியால் இஞ்சி சாகுபடிக்கு…

Read more
வல்வெட்டித்துறையில்-புலிகளின்-தலைவரின்-வீட்டை-மீளமைப்பதே-பொருத்தமானது!

வல்வெட்டித்துறையில் புலிகளின் தலைவரின் வீட்டை மீளமைப்பதே பொருத்தமானது!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான தலைவர் பிரபாகரனின் சகோதரிக்கு அறிவுறுத்த வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானித்துள்ளது.வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு,…

Read more