கரிநாள் போராட்டத்தில் சகல மக்களும் திரள வேண்டும்!

கரிநாள்-போராட்டத்தில்-சகல-மக்களும்-திரள-வேண்டும்!


இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.மேலும் தெரிவித்ததாவது:-“இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டங்கள் தொடர்பாக மாணவர்கள் எம்மைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ள இந்தப் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை நாம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளோம்.மேலும், மட்டக்களப்பிலும் கிளிநொச்சியிலும் மட்டுமல்லாது, தமிழர் தாயகம் எங்கும் அன்றைய நாளை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.எனவே, மக்கள் அனைவரும் மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சிக்கு அணிதிரண்டு சென்று கரிநாள் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.தமிழின இருப்பை அழிக்கும் ஒற்றையாட்சி முறைமையை அடியோடு நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை எட்டும் வரையில் கரிநாள் என்ற செய்தியை நிரூபிக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி ஒன்றுதிரள வேண்டியது அவசியமாகும்.இந்த அரசு தமிழ் மக்களுக்கு நல்லதைச் செய்வதாகக் கூறிக்கொண்டாலும், தொடர்ச்சியாக இனவாத ரீதியில் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, தமிழ் மக்கள் தொடர்பில் கடந்த கால அரசுகள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதேபோன்று இன்றைய அரசும் செயற்பட்டு வருகின்றது.” – என்றார்.

Related Posts

பாலின மாற்ற சிகிச்சை  : இளம்பெண்ணுக்கு 2 மில்லியன் டொலர் இழப்பீடு! – Global Tamil News

அமெரிக்காவில் டீன் ஏஜ் பருவத்தில் மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு (Double Mastectomy) உட்படுத்தப்பட்ட 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, நீதிமன்ற ஜூரி குழுவினர் 2 மில்லியன் டொலர் (சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகம்) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளனர். பாலின…

Read more

🇨🇳 சீன இராணுவம் அதியுயர் தயார் நிலையில்  -ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றம்  – Global Tamil News

சீன இராணுவம் ‘போருக்கு நெருக்கமான’ (Near-War Alert) அதியுயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தாய்வான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் அமெரிக்காவின் தலையீடுகளைத் தொடர்ந்து,…

Read more
தையிட்டி-விகாரைக்கு-எதிராக-கொட்டும்-மழைக்குள்ளும்-போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய…

Read more

ரணில் மீதான விசாரணை சட்டப்படிதான் நடக்கிறது…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது…

Read more

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படாது! ஆனால்…

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 15,000 பணியாளர்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காவல்துறை திணைக்களங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இந்தத் திணைக்களம் கலைக்கப்பட மாட்டாது எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார். திணைக்களத்தின் மொத்தமுள்ள…

Read more
தொடர்-இலக்கங்களை-அழித்த-படகுகளில்-அத்துமீறும்-இந்திய-கடற்தொழிலாளர்கள்-–-அருகில்-சென்ற-நயினாதீவு-கடற்தொழிலாளர்கள்-மீதும்-கல்-வீச்சு

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை…

Read more