1

1


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதற்கமைய, சம்பள அதிகரிப்பிற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

பிரிட்டிஷ்-குடிமக்கள்-விசா-இல்லாமல்-சீனா-செல்ல-அனுமதி

பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த…

Read more
உலக-சந்தையில்-தங்கத்தின்-விலை-வரலாற்றில்-முதல்-முறையாக-5,500-டாலர்களை-தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,500 டாலர்களை தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாக…

Read more

பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை! – Global Tamil News

பிரித்தானிய குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் பிரித்தானியர்களுக்கு விசா இல்லா நுழைவு அனுமதியை (Visa-free entry) சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது,…

Read more
நாவற்குழியில்-சிங்கள-வீடுகள்-விற்பனைக்கு!

நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு!

யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது.சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில்…

Read more
சுமந்திரன்-அழைப்பு:தகுதியில்லை-கஜேந்திரகுமார்!

சுமந்திரன் அழைப்பு:தகுதியில்லை -கஜேந்திரகுமார்!

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு…

Read more

$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய செனட் விசாரணையில் அமெரிக்கா வெனிசுலாவில் உள்ள எண்ணெயின் முதல் பெரிய விற்பனையை முடித்துள்ளது என்று தெரிவித்தார் — அதன் மதிப்பு $500…

Read more