பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!


 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் இன்று (28) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் கடந்த 19 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்ததாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாடு தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது அவ்வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த 11 பேரில் 09 பேர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இவர்களில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி வண. திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், வண. பலங்கொட கஸ்ஸப தேரர், வண. திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் வண. நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இதன்போது திருகோணமலை பொலிஸார், சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோதக் கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விடயங்களை முன்வைத்தனர். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது வண. பலங்கொட கஸ்ஸப தேரர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததுடன், பின்னர் அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

மத்திய மலைநாட்டை மீட்க புதிய புரட்சிகரமான திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார்! – Global Tamil News

இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மலைநாட்டின் பழைய செழுமையை மீட்டெடுக்கவும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டிலேயே ஒரு புதிய அதிகாரசபையை (Authority) அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது வெறும் நிர்வாக மாற்றமல்ல, மலைநாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு பசுமைப் புரட்சி என்கிறார்…

Read more

   புத்தர்சிலை  வைத்த  வழக்கு  – பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை அமைத்தமை மற்றும் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கோட்டை வீதி, டச்பே (Dutch Bay) கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டதாகத்…

Read more

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறை  – Global Tamil News

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயோன் ஹி (Kim Keon Hee) அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 மாதங்கள் (1 வருடம் 8 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 28, 2026)…

Read more

லண்டன் – சிட்னி இடையில் இடைவிடாத விமான சேவை – Global Tamil News

குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் “புராஜெக்ட் சன்ரைஸ்” (Project Sunrise) திட்டம், விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் லண்டன் – சிட்னி இடையிலான இந்த இடைவிடாத (Non-stop) விமான சேவை தொடங்கவுள்ளது. இதற்காக…

Read more

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் பொருத்தமற்றது – Global Tamil News

அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை (ஜனவரி 28, 2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மீனவ கூட்டுறவு…

Read more
நிதியைத்-தவறாகப்-பயன்படுத்தியமை:-நீதிமன்றில்-முன்னிலையானர்-ரணில்!

நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை: நீதிமன்றில் முன்னிலையானர் ரணில்!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) பிற்பகல் 1.25 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி…

Read more