கிளிநொச்சியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் கைது
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை உத்தியோகத்தர் ஒருவர் சக உத்தியோகத்தரின் தொலைபேசியை பயன்படுத்தி நூதன முறையில் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிரடிப் படை உத்தியோகத்தரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்