Tuesday, August 19, 2025
Home tamil newsயாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு! – Global Tamil News

யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு! – Global Tamil News

by ilankai
0 comments

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரைபை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம காவல் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , அவற்றினை நீதிமன்றில் பரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

banner

You may also like