6
தைப்பொங்கல் தினத்தை நாளை (15) கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தைப்பொங்கலை கொண்டாட மக்கள் மும்முரமாக செயற்பட்டு வருவதைக் காணமுடிகிறது.வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழ வகைகள் என்பவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.தைப்பொங்கல் திருநாள் நாளை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. கடந்த வருடத்தினை விட இந்த வருடம் மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்து வருவதாக வவுனியாவில் உள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.