யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த செல்வகுணசிங்கம் பேரின்பநாயகி (வயது 55) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்துடன் , எழுதுமட்டுவாழ் பகுதியில் சிறு வீதியில் இருந்து யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஏற்ற முற்பட்ட பெண் விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.