லண்டனின் ஹரோ (Harrow) மற்றும் வீல்ட்ஸ்டோன் (Wealdstone) ஆகிய தமிழா்கள் வாழும் பகுதிகளில் அண்மைய நாட்களில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் மெトロபொலிட்டன் காவல்துறை (Met Police) முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளில் சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், கத்திக்குத்து கலாச்சாரம் (Knife Crime), கடைகளில் திருடுதல் (Shoplifting) மற்றும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த ‘சுற்றிவளைப்பு’ மற்றும் ‘தேடுதல்’ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீல்ட்ஸ்டோன் ஹை ஸ்ட்ரீட் (Wealdstone High Street) பகுதியில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் இடங்கள் சோதனையிடப்பட்டன. நேற்று ஜனவரி 9 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ஹரோ நகர மத்திய பகுதியில் (Harrow Town Centre) காவல்துறையினர் அதிநவீன முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகளைக் கைது செய்தனர். அதேநேரம் இன்று சனிக்கிழமையும் வீல்ட்ஸ்டோன் மற்றும் ஹரோ பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் மற்றும் சோதனைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இன்று காலையில் வீல்ட்ஸ்டோன் சதுக்கத்தில் (Wealdstone Square) இடம்பெற்ற ஒரு சிறிய சம்பவத்தின் போது (புறாக்களுக்கு உணவளித்தது தொடர்பான தடை மீறல்) ஒரு பெண் கைது செய்யப்பட்டமை மற்றும் காவல்துறை வாகனங்கள் குவிக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. எனினும், கடந்த சில மாதங்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையின் (Three-month operation) இறுதி முடிவுகளாகவே இந்த 70 கைதுகள் அமைந்திருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணிக்கும் மக்கள் தங்களின் அடையாள விபரங்களை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களை வைத்திருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. காவல்துறையினரின் முறையான சோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆவா் ஒரு சில பெண்களும் ‘கடைகளில் திருடுதல்’ (Shoplifting) மற்றும் ‘போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள் அல்லது பலமுறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. வீல்ட்ஸ்டோன் பகுதியில் இயங்கி வரும் சிறு அளவிலான போதைப்பொருள் விற்பனை குழுக்கள் மற்றும் ‘கத்திக்குத்து’ கலாச்சாரத்துடன் தொடர்புடைய இளையோர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலர் இதில் அடங்குவர். இவா்கள் ‘வகுப்பு ஏ’ (Class A – Heroin, Cocaine) மற்றும் ‘வகுப்பு பி’ (Class B – Cannabis) போதைப்பொருட்களை விநியோகித்தல் மற்றும் வைத்திருந்தமை, கடைகளில் திருடப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை (Branded items) குறைந்த விலைக்கு வாங்கி, சட்டவிரோதமாக மீண்டும் விற்பனை செய்த வியாபாரிகள் மற்றும் தனிநபர்கள் ஆவா் . மேலும் இந்தச் சுற்றிவளைப்பின் போது, முறையான விசா அல்லது ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த சிலரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் (Border Force) அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேரலை முக அடையாளத் தொழில்நுட்பம் (LFR) மூலம் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஏற்கனவே வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘Wanted’ பட்டியலில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் அதிகளவில் தமிழர்கள் வசிப்பதாலும், அங்குள்ள வணிக நிலையங்களுக்குத் தமிழர்கள் அதிகம் செல்வதாலும் இச்சம்பவம் சமூகத்தில் பெரிய பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, வீல்ட்ஸ்டோன் ஹை ஸ்ட்ரீட் (High Street) பகுதியில் உள்ள சில கடைகள் ‘திருட்டுப் பொருட்களைக் கையாளுதல்’ என்ற சந்தேகத்தின் கீழ் சோதனையிடப்பட்டன. Tag Words: #HarrowNews #Wealdstone #LondonTamil #MetPolice #PoliceRaid #SafetyUpdate #UKTamilCommunity #BreakingNewsLondon
🚨 லண்டன் ஹரோ , வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு -70 பேர் கைது – Global Tamil News
11