Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் க்டந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று புதன்கிழமை காலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் முன்னர் துறவற அங்கிகளை அணிந்து ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்ததாகவும், இராணுவ சேவையிலிருந்து தப்பி ஓடியதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர், பெண் மருத்துவரின் இரண்டு மொபைல் போன்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மீதமுள்ள தொலைபேசியில் இருந்து வந்த சிக்னல்களின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இருப்பினும், அவுகனா தொடருந்து நிலையம் அருகே பலவீனமான சிக்னல்கள் காரணமாக, சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தேடுதலை தீவிரப்படுத்தினர்.
கல்னேவ காவல்துறையின் சிறப்புக் குழு, கல்னேவவின் எலபதுகம பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்தது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் மருத்துவரைக் கத்திமுனையில் பாலியல் அத்துமீறல் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்புறக்கப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நாட்டின் சகல மருத்துமனைகளின் மருத்துவர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்புறக்கணிப்பு நடைபெறுகின்றது.