பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்க வருமாறு , சுயாதீன ஊடகவியலாளர் க. குமணனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். 

எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு அளம்பில் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறித்த அழைப்பாணையில் , ஊடகவியலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் ஆக்குவோம் என ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் , விசாரணைகளை முன்னெடுத்து , அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது