முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் 

பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த  தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் கிணற்றிலிருந்து சடலமாக வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர் 

உசாகரன் மாலினி( வயது 38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது 11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிணற்றின் அருகில் இன்று வியாழக்கிழமை(24)  அதிகாலை கைப்பை ஒன்றும்  இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் தகவல் வழங்கியதையடுத்து கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளனர்

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி  வருகை தந்து  பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது 

மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று  பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார் 

அவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.