செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான இடம்பெற்றது என்பதற்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது உங்களிற்கு தெரியும்.

ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்னரே எங்களிற்கு அறிவித்திருந்தார்கள்.வார ஒரு நோக்கம் இருப்பதாக எங்களிற்கு சொல்லப்பட்டிருந்தது.

அப்படி சொல்லப்பட்ட நிலைமையில் வடகிழக்கை சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.

செப்டம்பர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முடிவடையும் வரை இங்கே வராதீர்கள் என அவர்கள் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஏனென்றால் நீங்கள் அதற்கு முதல் இங்கு வந்தீர்கள் என்றால் அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் கேட்க விரும்புகின்ற அத்தனை வாக்குறுதிகளையும் செம்டம்பர் மாதம் வரப்போகின்ற அந்த தீர்மானத்தை எந்தளவிற்கு பலவீனப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு பலவீனப்படுத்துவதற்கான முழு முயற்சியையும் செய்து இறுதியில் அந்த தீர்மானம் பலவீனப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களிற்கு அதிலிருந்து மீள முடியாத நிலையை ஏற்படுத்தும் என  அவர்கள் தங்கள் மகஜரில் வலியுறுத்தியிருந்தனர்.

தெற்கில் இருக்கின்ற சுமார் 100 மனித உரிமை அமைப்புகளும் அவசரமாக நீங்கள் வராதீர்கள் என அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

அதைஎல்லாவற்றையும் மீறித்தான் அந்த ஆணையாளர் வருகின்றார், அந்த ஆணையாளர் வந்தபோது ,துரதிஸ்டவசமாக என்னால் இங்கே இருக்க முடியாத ஒரு காலம்.

2021ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி ஒரு பொதுகடிதத்தை தமிழ் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து அனுப்பியிருந்தோம்.

பொறுப்புக்கூறல் தொடர்பிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் – நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

அந்த கடிதத்தில் அவ்வேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராயிருந்த சம்பந்தன் அவர்களும் கையெழுத்திட்டிருந்தார்.

மனித உரிமை விடயத்தில் உறுதியாக இணைந்து பயணிக்கின்ற அமைப்புகளும் கைச்சாத்திட்ட கடிதம்.

இன்றைக்கும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அந்த கடிதம் ,இன்றும் மிகவும் பொருத்தமான ஒரு கடிதம்.

உண்மையிலேயே தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயம் 100க்கு நூறு வீதமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடிதமாக அது காணப்படுகின்றது.

நாங்கள் அந்த கடிதத்தை மீண்டும் வலியுறுத்தவேண்டும் என விரும்பியதால் நாங்கள் அந்த முயற்சியையும் மேற்கொண்டு வெற்றியையும் அடைந்தோம்.

அனைத்து தரப்புகளும் அந்த கடிதத்தி;ல் கையெழுத்திட்டவை மனித உரிமை ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது இங்கேயிருக்கின்ற அமைப்புகளை சந்தித்த இடத்தில்,தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக சிங்கம் ஊடாக அது வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தை நாங்கள் வழங்கியபோது செம்மணியையும் உள்வாங்கித்தான் அதனை கொடுத்திருந்தோம்.

தற்போது இருக்கின்ற சூழல் பொறுப்புக்கூறல் படிப்படியாக குறைந்து பேச்சுபொருளாக மாறிவிட்ட சூழல்

போர்க்காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான முயற்சிகள் பூஜ்ஜியத்திற்கு வருகின்ற இடத்திற்கு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து விட்டினம்.

அதனை இன்று ஒரு பேச்சுப்பொருளாக கூட இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தியுள்ளார்கள்.

கடந்த தீர்மானம் உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்றது அரசாங்கத்தை விசாரணைமுன்னெடுக்க சொல்லி  செய்யசொல்லி கேட்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் அதுவும் அந்த தீர்மானத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் போரின்கடைசிக்கட்டத்தில் ,இடம்பெற்ற விடயங்களை விசாரணை செய்யவேண்டும் என்பதுதான் 2012 முதல் இந்த தீர்மானங்களின் குறிக்கோளாக உள்ளது.

செம்மணி போர்நடைபெற்ற காலத்தில்தான் இடம்பெற்றது.ஆனால் இந்த தீர்மானம் விரும்புகின்ற அந்த காலப்பகுதிக்கு வெளியே.

புதுதீர்மானம் செப்டம்பரில் வருகின்றது, செம்மணி எப்போதோ மறைக்கப்பட்ட ஒரு விடயம்,வெறுமனே 15 உடல்களை கண்டுபிடித்த இடத்தில் அதன் பின்னர் அரசாங்கம் விசாரணைக்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

வெளிவிவகார அமைச்சராக லக்ஸ்மன்கதிர்காமர் இருந்தவேளை இது ஒரு பொய்,மனித புதைகுழிகள் இல்லை குற்றவாளியொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட இடத்தில கோபத்தில எல்லா பழிகளையும் அரசாங்கத்தின் மீது போட விரும்பின நிலையில் தான் அந்த வாக்குமூலம் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லைஉண்மைதன்மையும்  என தெரிவித்து முழுமையாக மூடினார்கள்.

அதனை கிடப்பில் போடுவதற்கு தான் அவர்களின் முழுமுயற்சியும் இருந்தது.

சந்திரிகாவின் அரசாங்கம் மாத்திரமல்ல அதற்கு பிறகு வந்த ரணில்விக்கிரமசிங்க அரசாங்கமும் இவை எவற்றையும் எடுத்துப்பார்க்க விரும்பவில்லை, இவ்வாறான சூழ்நிலையில் மகிந்த அரசாங்கத்தை பற்றி நாங்கள் சொல்லவேண்டியதில்லை.

செம்மணி பொய் 600 உடல்களே கொல்லப்பட்டு புதைக்கப்படவில்லை என சொல்லப்பட்டு ஒரு முடிவாகயிருந்த நிலையில் தான், செம்மணியின் இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.

செம்மணி எங்களிற்கு இரண்டு சந்தர்ப்பங்களை தருகின்றது,

ஒன்று ஜெனீவாவில் இருக்கின்ற சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது.

இரண்டாவது விடயம் செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது.

அதாவது நடந்தது இரண்டு தரப்புகளிற்கும் இடையிலான ஒரு போர் அல்ல,இதற்கு பின்னால் ஒரு சரித்திரம் உள்ளது, தமிழ் மக்களிற்கு நடந்த அநியாயங்களை சரியாக பார்த்தால் அது இறுதியில் தமிழ்மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்ற எல்லா விடயத்தையும் உள்வாங்கி யார் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்பதுதான் எங்களிற்கு கூட தேவைப்படுகின்றது.

அப்போதுதான் எங்களிற்கு உண்மையான நீதியும் நியாயமும் கிடைக்கும்.

இல்லாவிடில் ஒரு சரித்திரத்தை மாத்திரம் மூடிமறைத்துவிட்டு ஒரு பக்கத்தை மாத்திரம் படமெடுத்துவிட்டு  நீங்கள் இதற்குரிய தீர்வை கொண்டுவாருங்கள் என கேட்பது நியாயத்தைகொண்டுவரப்போவதில்லை.

செம்மணி எங்களிற்கு அந்த கதவையும் திறக்கவைத்துள்ளது.

ஆகவே இன்று எங்களிற்கு உள்ள தேவை என்னவென்றால் இந்த முழு விடயத்தையும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதே.

செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இது ஒரு ஆபத்தானது ஏனென்றால் இலங்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு உரிய சட்டத்தரணியாக செயற்படுகின்றது அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் வந்தாலும் அவர்கள்தான் போவார்கள், அதேவேளை அவர்கள் தான் குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வார்கள்.அரசதரப்பில் இருக்கின்ற பிழை செய்தவர்களிற்கு எதிராகவும் அவர்கள்தான் வழக்கை தாக்கல் செய்வார்கள்.

இதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது இலங்கையின் சட்டத்துறையின் ஒரு பொதுப்பிரச்சினை.அந்த பொதுப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒரு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம்.

அதற்கும் இனப்பிரச்சினை காலத்தில் இலங்கையில் நடந்த அநியாயத்திற்கும் இடையில்  எந்த தொடர்பும் இல்லை.

அவ்வாறான சுயாதீன அலுவலகம் உருவாக்கப்பட்டாலும் அதன் ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களிற்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.

ஏனென்றால் இலங்கையில் இருக்ககூடிய இனப்பிரச்சினை இனங்களிற்கு இருக்ககூடிய பிரச்சினை,அந்த இனங்கள்  என பார்க்கின்ற போது இலங்கை அரசு என்பது ஒரு இனத்தின் சொத்தாக மாறியுள்ளது.

ஏனைய இனங்களிற்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கை அரசின் கட்டமைப்பே மாறியிருக்கின்றது. என்ற கருத்தை சொல்லித்தான் முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் அவர்கள் தெளிவாக சொல்லியிருந்தார் ஒரு உள்ளக விசாரணை இலங்கையிலே பொருத்தமே இல்லாதது என்று.

இலங்கைக்கு உள்ளே அந்த இனப்பிரச்சினையின் தாக்கம் ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையே நடுநிலைதன்மை இழக்க வைத்திருக்கின்றது என்பதும் அது ஒரு போதும் ஒரு உள்ளக விசாரணை ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த குற்றங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்காது.

ஆகவே ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் , சர்வதேச விசாரணைதான் மிகப்பொருத்தம் ஆனால் ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் என சொன்னார்.

அதற்கு ஒரு விட்டுக்கொடுப்பாக நாங்கள் தமிழ் தரப்பு தெரிவித்தது இதூன் கலப்புபொறிமுறையின் முழு கட்டுப்பாடும் சர்வதேச தரப்பிடம் இருந்தால் தான் கலப்பு பொறிமுiயை நாங்கள் பரிசீலிப்போம் . இதுதான் எங்களின் நிலைப்பாடாகயிருந்தது.

இன்றைக்கு திட்டமிட்ட வகையிலே சுயாதீன வழக்குரைஞர் அலுவலம் ஒன்று தேவை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுடைய விடயத்திற்கு தீர்வாக அதனை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.