மண்டைதீவு புதைகுழி வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது. வழக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்று புதன்கிழமை சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டிருந்தது.அதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீண்டும் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர்.இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெற வேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிட்டுள்ளார்.1990 ம் ஆண்டில் தீவகப்பகுதிகளில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கை படைகளால் படுகொலை செய்யப்பட்டு மண்டைதீவிலுள்ள கிணறுகளுள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்டைதீவு புதைகுழி:மூன்று மாதம் கிடப்பில்!
3
previous post