அனுரகுமார திஸநாயக்க கேணல் ராஜசிங்க என்கிற இராணுவ அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருக்கின்றார் .கோத்தபாயா ராஜபக்சே தொடர்ச்சியாக பொது நிருவாகத்தை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்திய போதும் பாராளுமன்றத்திற்கு நேரடியாக அறிக்கையிடும் சுயாதீனமான நிறுவனமான கணக்காய்வாளர் திணைக்களத்தில் கைவைக்கவில்லை .ஆனால் பொதுத்துறை கணக்காய்வு தொடர்பான அனுபவம் (Public Sector Auditing), பொது நிதிச் சட்டம் குறித்த அறிவு (Public Financial Law), சுயாதீனமாக இயங்க கூடிய ஆற்றல் (Ability to Function Independently) என எந்த பின்னணியும் இல்லாத ஒரு இராணுவ அதிகாரியை தீவின் மிக பிரதான நிறுவனத்தின் தலைமை பதவிக்கு பரிந்துரைத்திருக்கின்றார் குறிப்பாக இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் தொடர்ச்சியாக இலங்கை இராணுவ கட்டமைப்பின் நிதி விரயம், மோசமான நிதி முகாமைத்துவம், ஊழல் மோசடிகள் பற்றி அறிக்கையிட்டு வந்த நிலையில் குறித்த நிறுவனத்திற்கே இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரை தலைவராக நியமிக்க அனுரா குமார திஸநாயக்க முயற்சிக்கின்றார் விசேடமாக இலங்கை இராணுவத்தின் உள்ளக கணக்காய்வாளராக கேணல் O.R. ராஜசிங்கே பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த பலவீனமான சொத்து முகாமைத்துவம் (Poor Asset Management), அலட்சியமான நிதி கட்டுப்பாடுகள் (Weak Financial Controls), வேகமற்ற நடவடிக்கைகள் (Slow or Inadequate Action) என பல்வேறு விடயங்களை 2024 ஆம் ஆண்டு கணக்காய்வறிக்கை பதிவு செய்திருக்கின்றது
கணக்காய்வாளர் நாயகமாக :கேணல் ராஜசிங்க!
3
previous post