யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் , தூபியை உடைத்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.அதனை அடுத்து , அதனையொரு நினைவு தூபியாக பேணி வந்த நிலையில், குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதம் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.இதன்பின் அணையா விளக்கு தூபி அன்றைய தினமே மீண்டும் நிறுவப்பட்டது.இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி விஷமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது
யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
4