2
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் . நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் , சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்த காவல்துறையினர் , அவர்களிடமிருந்து 12 துவிச்சக்கர வண்டிகளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.