அணையா விளக்கு நினைவேந்தலில் இனப்படுகொலையாளர்களது பங்காளிகள் பங்கெடுக்க கூடாதென தவத்திரு வேலன்சுவாமிகள் தெரிவித்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.அவ்வறிவிப்பு அண்மையில் ஈபிடிபியுடன் கைகோர்த்த சுமந்திரன் ஆதரவாளர்களை சீற்றமுற வைத்துள்ளது.

இந்நிலையில் இறுதி யுத்த வெற்றியில் தமக்கும் பங்குண்டு என்று கூறிய புளொட் இயக்க உறுப்பினர்களை அணையா விளக்கு நிகழ்ச்சியில் வைத்து வரவேற்று ஆசிவழங்கிய தவத்திரு வேலன் சுவாமிகள் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் சுமந்திரனின் ஆதரவாளரான சயந்தன்.

மேதகுவிற்குத் துரோகமிழைத்து இயக்கத்தைக் கூறுபோட்டு இயக்கத்தின் அழிவுக்கே காரணமான கருணா மற்றும் பிள்ளையானின் சகாவான கோபாலன் பிரசாத்திற்கு  தவத்திரு வேலன் சுவாமிகள் தமிழ்மக்களின் உணர்பூர்வமான அணையா விளக்கு நிகழ்வில் வரவேற்றமை தொடர்பிலும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான சயந்தன் சீற்றம் தெரிவித்துள்ளார்.

.