Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை இழந்துள்ளார். மீசை இல்லாததால் மண் படவில்லை. பல சபைகளில் தமது கூட்டுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்த கஜேந்திரகுமாரின் பேரவை ஆட்சியமைத்துள்ளது. இதில் சில திருவுளச் சீட்டினால் கிடைத்தவை. இதுதான் இயற்கையின் நியதிபோலும்.
தமிழர் தாயகம் என்று போற்றப்படும் வடக்கு கிழக்கில் நடந்து முடிந்த உள்;ராட்சிச் சபைத் தேர்தல்களும்இ அவற்றுக்கான சபைகளைக் கைப்பற்றுவதும்இ தமிழ்த் தேசியத்தை வெல்வதற்கான போராட்டம் போன்று காட்சி கொடுக்கிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தளவில் கடந்த பொதுத்தேர்தலில் கோட்டை விட்ட சரிவை நிவர்த்தி செய்யவென தமிழரசுக் கட்சி பெரும் பாடுபட்டு பல சபைகளில் பல உறுப்பினர்களையும் பெற்றது அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஒருகாலத்தில் 22 எம்.பிக்களை கொண்டிருந்த தமிழ்த் தேசிய தரப்புஇ தனியான தமிழரசான பின்னர் எட்டுக்கு இறங்கியுள்ளது. எனினும்இ வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி மட்டுமே எம்.பிக்களை கொண்டுள்ளது என்ற பெருமை சாத்தப்படுகிறது. தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் முதன்மையானதாகவும்இ கலாசார தலைநகராகவும் காலாதி காலமாக இருந்து வருகிறது. ஆனால் இங்கிருந்து ஒரேயொருவர் மட்டுமே தமிழரசு கட்சியில் வெற்றி பெற முடிந்தது என்பது மறுபக்க வரலாறு.
இதனை எழுதும்போது 1984ம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவரது மணிவிழா உரையில் கூறிய ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. தமிழ்க் குடும்பங்களிடம் கிடைக்கும் சொரியல் காணிகள் பற்றிக்கூறிஇ அதனூடாக தமிழ் மண் பாதுகாக்கப்பட வேண்டியதை மிக நாசூக்காக வெளிப்படுத்தினார்.
‘ஒருவருக்கு அவரது குடும்ப பாரம்பரியம் ஊடாக பல இடங்களில் காணிகள் இருந்தன. ஆனால் எல்லாமே காற்பரப்புஇ அரைப்பரப்பு என்றே இருந்ததால் அவரால் எங்கும் ஒரு வீட்டை தமக்கென கட்ட முடியவில்லை. சொரியல் காணிகளால் எந்தப் பயனுமில்லை” என்று சுருக்கமாக ஆழமான கருத்தை துணைவேந்தர் எடுத்துரைத்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த எட்டு ஆசன வெற்றிகள் சொரியல் காணிகள் போன்றது. எந்தவொரு மாவட்டத்திலும் தனித்து ஆட்சி செலுத்தும் வல்லமை இல்லை. இதன் பிரதிபலிப்பை கடந்த மாத உள்;ராட்சித் தேர்தல் முடிவுகள் ஊடாக காண முடிந்தது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
தமிழரசுக் கட்சி இப்போது பதில் தலைவரின் கீழ் இயங்குகிறது. ஆனால் அவரின் கீழ் இரண்டு தலைமைகள் பகிரங்கமாக இயங்குகின்றன. இதனைஇ சிறீதரன் தமிழரசு – சுமந்திரன் தமிழரசு என்று பொதுமக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனர். கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு சிறீதரன் வென்ற பின்னர் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் சுமந்திரன் தாமாக தமக்கொரு அணியை உருவாக்கிக் கொண்டார். பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம் பல தடவை இரண்டாம் நிலை இரட்டைத் தலைமைகள் பற்றி பகிரங்கமாகவும்இ மறைமுகமாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் கட்சியை சீர்படுத்தி விடலாமென்ற நம்பிக்கையுடன் இவர் செயற்படுவதுபோல் தெரிகிறது. சிறீதரனை வெளியே செல்லவிடாது அணைத்துச் செல்ல வேண்டுமென்ற மனப்பாங்கு இவரிடம் காணப்பட்டாலும்இ சுமந்திரனின் கைகளுக்குள் இவர் சிக்கி விட்டாரென்பதுவே பெரும்பாலான பொதுமக்களின் அபிப்பிராயமாக உள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் கறுப்பு ஆடுகள் உள்ளன என்று இவர் அண்மையில் குறிப்பிட்டது எவரை நோக்கியது என்ற கேள்வியும் மக்கள் மன்றில் எழுந்துள்ளது.
இவ்விடயங்கள் பற்றி அவருடன் உரையாடினால் கட்சியைக் காப்பாற்ற தாம் எடுக்கும் நடவடிக்கைகள் தனிப்பட்ட வகையில் எவரையும் காப்பாற்றாது என்பதை மட்டும் இறுக்கமாகச் சொல்கிறார். காலப்போக்கில் இதனை தெரிந்து கொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் உண்மை நிலை தெரிய வரலாம்.
இன்று தமிழ் மக்களை வழிநடத்த நல்லதொரு தலைவர் இல்லை என்று அறப்பணியாளரும்இ சிவபூமி நிறுவனருமான செந்தமிழ் செல்வர் ஆறு.திருமுருகன் பகிரங்கமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெரிவித்து வருவது தாயகத்திலுள்ள சகல அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது. இதன் வெளிப்பாடாக இப்போது உள்;ராட்சிச் சபைகளை அமைப்பதில் ஏற்படும் பிச்சல் பிடுங்கல்களை பார்க்க முடிகிறது. கிளிநொச்சியில் சிறீதரன் ஒருவாறு தமது பிரதேசத்திலுள்ள மூன்று சபைகளையும் வென்று தமதாக்கி விட்டார். ஆனால்இ யாழ்ப்பாணத்தில் பதினேழு சபைகளையும் முழுமையாக கைப்பற்ற முடியாது தமிழரசுக் கட்சி சறுக்கிவிட்டது.
பதினேழு சபைகளிலும் நாமே ஆட்சியமைப்போம் என்று தேர்தலுக்கு முன்னரும்இ பின்னரும் அதனை ஒரு சவாலாக வீசி வந்தவர் சுமந்திரன். கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சிகள் அந்தந்த பிரதேச சபைகளை அமைக்க மற்றைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டுமென்றும்இ இதனை ஒரு கோட்பாடு என்றும் அடிக்கடி உச்சரித்தவரும் இவரே. ஆனால்இ கணிசமான ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆட்சியில் பங்களிக்க இவர் மறுத்ததால் அவர்கள் வேறு திசை நோக்கி போய்விட்டார்கள்.
இறுதியில் மாற்றான் தோட்டத்து மாங்காய் புளிக்கும் என்றால் அதை இனிப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்ற போக்கில் ஸ்ரீதர் தியேட்டருக்குள் சென்று பிச்சா பாத்திரம் ஏந்தியவர்களும் இவர்கள்தான். நேற்றைய துரோகி இன்றைய நண்பன். காரியம் முடிந்தபின் அவன் மீண்டும் துரோகியாக்கப்படலாம் என்பதை தமிழினம் இன்று நிஜக்கண்களால் பார்க்கிறது.
நாற்பத்தைந்து உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சியின் பதின்மூன்று உறுப்பினர்கள் முப்பது வீதத்துக்கும் குறைவானவர்கள். இவர்கள் மேயர்இ உதவி மேயர் கதிரைகளைக் கைப்பற்ற டக்ளசின் ஈ.பி.டி.பி.இ ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிஇ சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஆதரவு வழங்கின. இவ்வாறு அந்தக் கதிரையை பெறுவதைவிட ஒதுங்கியிருந்தால் மக்கள் மதித்திருப்பார்கள்.
யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளில் ஐந்தினை கஜேந்திரகுமார் தலைமையிலான பேரவை கைப்பற்றியுள்ளது. காரைநகர் சபை சுயேட்சைக் குழுவொன்றின் வசமாகி விட்டது. விக்னேஸ்வரன் – மணிவண்ணன் கூட்டணியுடன் சேர்ந்து நல்லூரில் தலா இரண்டு வருடம் (ஐம்பதுக்கு ஐம்பது) என்ற வகையில் தமிழரசு ஒப்பந்தம் செய்து காத்திருக்க வேண்டி வந்துவிட்டது.
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி பெற்ற ஒன்பது ஆசனங்களைத் தவிர்த்துப் பார்க்கின் தமிழரசுக் கட்சிக்கு ஆகக்கூடியதாக பதினொரு ஆசனங்கள் கிடைத்தன. ஆனால்இ கஜேந்திரகுமாரின் பேரவை இங்கு ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கேட்டதைக் கொடுத்திருந்தால் தமிழரசுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.
கிழக்கு மாகாணத்தில் வாகரை பிரதேச சபையை பிள்ளையானின் கூட்;டணியும்இ மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையை சுயேட்சைக் குழுவொன்றும் கைப்பற்றியுள்ளது. சிறையில் இருந்தவாறே பிள்ளையான் அணி வெற்றி பெற்றது தனிவரலாறு. வவுனியாவில் மட்டும் சகல தமிழர் தரப்புகளும் இணைந்து ஆட்சியமைத்து தமிழர் மானத்தைக் காப்பாற்றியுள்ளன. இங்கு தலைமைப் பதவி சங்குக் கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.
எத்தனை பிரச்சனைகள்இ எதிர்நீச்சல்கள்இ வாக்குத் தடுமாற்றங்கள் ஊடாக தமிழரசுக் கட்சி முதன்மை நிலையிலிருந்தும் பல சபைகளை இழந்துவிட்டது. தோல்வி அனுபவத்தைத் தரும்இ வெற்றி அகங்காரத்தைக் கொடுக்கும் என்ற முதுமொழியே இதற்குக் காரணம்.
கூடிய வாக்குகளைப் பெற்ற தங்களுக்கே மற்றைய கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தரவேண்டும் என்பதை ஒருவதை எச்சரிக்கைப் பயமுறுத்தலாக சுமந்திரன் விடுத்து வந்தார். மொத்த உறுப்பினர்களில் எங்களுக்கே அதிகமானவர்கள் என்ற மனக்கணிதத்தையும் அடிக்கடி எடுத்துக்கூற தவறவில்லை. இதன்வழியாக இரண்டு முக்கிய விடயங்களை கவனிக்க முடியும்.
சுமந்திரன் கோட்பாடு என்பது இங்கு எடுபடவில்லை. உண்மையைச் சொன்னால் அது என்னவென்று பலருக்கும் புரியவே இல்லை. அதனால் எவரும் அதனையிட்டு அலட்டிக் கொள்ளவுமில்லை. தேர்தலின்போதும்இ தேர்தலின் முடிவின்போதும்இ சபைகள் அமைக்கப்படும்போதும் எல்லாம் இயற்கையின் நியதி என்று கூறிவந்த சி.வி.கே.சிவஞானம் அவர்களின் கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. திருவுளச் சீட்டின் மூலம் கஜேந்திரகுமார் அணிக்குக் கிடைத்த சில சபைகளின் வெற்றி இயற்கையின் நியதி போலும்.