பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் (நரிக்குறவ சமூகத்தை) சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்‌ என 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை மூன்று வயது பெண் குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தைப்பகுதியில் இருந்துள்ளார் குழந்தைகளின் தாய்.

அக்குழந்தைகளின் தாய் காணாமல் போய்விட்டார் என்று என தேடிய உறவினர்கள் அப்பெண்ணை கண்டுபிடித்த போது, அவரின் கையில் இருந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தன. இதனைத் தொடர்ந்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன நடந்தது?

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் அத்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், “குழந்தைகளின் தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3 வயது பெண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் திண்டிவனத்தில் வசித்துவரும் தன் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார் குழந்தைகளின் தாய்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பின்னர், அவர்கள் ஊருக்கு வருவதாக உறவினரின் போனிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகே அவர்கள் கிடைத்தனர். அப்போது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன” என்றார்.

பெரும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.

இது குறித்து வழக்கின் விசாரணை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “குழந்தையின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில்194(i) BNSS ன்படி சந்தேக மரணம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார்.

கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் மூன்று வயது பெண் குழந்தையை அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான உறவினர், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனாலேயே குழந்தை உயிரிழந்ததாகவும் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தது என போலீஸார் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்படும் நபருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

மரணத்துக்குப் பின் நடந்தது என்ன?

குழந்தை உயிரிழந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் குழந்தையின் தாய் இருவரும் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் குழந்தையின் தாய்க்கு பணம் வழங்கிய அந்த நபர், குழந்தை உடல்நலக் குறைவால் இறந்ததாக கணவரிடம் கூறிவிடும்படி தகவல் தெரிவித்து அனுப்பியதாக போலீஸார் கூறுகின்றனர்.

இதையடுத்து, இறந்த குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் இருந்த அப்பெண்ணை உறவினர்கள் கடலூரின் உழவர் சந்தை பகுதியில் கண்டுபிடித்தனர்.

படக்குறிப்பு, மருத்துவமனை கண்காணிப்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர்குழந்தை சந்தேகத்துக்கிடமான விதத்தில் இறந்ததையறிந்த உறவினர்களும் அங்கிருந்த பொதுமக்களும் போலீசாருக்கு தகவல் வழங்கினர். போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும், குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் கூறினர்.

இதையடுத்து, இறந்துபோன 3 வயது சிறுமியின் உடலை போலீஸார் கைப்பற்றினர். பின்னர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோதனை- மருத்துவ அறிக்கைகள்

படக்குறிப்பு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில், இறந்துபோன சிறுமி உடலில் காயங்கள் இருந்ததும் விசாரணை அடிப்படையிலும் உடற்கூறாய்வு அடிப்படையிலும் 3 வயது குழந்தை, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில், முக்கிய சந்தேக நபரான உறவினரை திருவண்ணாமலை புன்னகம் பூண்டியிலிருந்து கைது செய்து அவர்மீது, போக்சோ சட்டத்தின் 7 பிரிவுகளும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை குற்றச்சாட்டும் பதியப்பட்டுள்ளது.

கடலூருக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்படும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அவர் காவல்துறையின் கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தையின் தாய் மீது சந்தேகம்

இக்கொடூரத்துக்கு குழந்தையின் தாயும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர் வழங்கிய பல தகவல்களும் சந்தேகத்தை வலுப்படுத்தியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு