குடும்பங்களாக முன்னாள் அமைச்சர்கள் கைதாகிவருகின்ற நிலையில் அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் கைது அரங்கேறலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.

அவ்வகையில் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லகஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லகஸ்மன் வசந்த பெரேரா ஆகியோர் கைதாகலாமென கூறப்படுகின்றது.

இலங்கை பணத்தில் 3ஆயிரத்து300 கோடி பெறுமதியுடையதும் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதுமான கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள்;. “அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது” .பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஹெகலிய மனைவி மகள் உள்ளிட்டவர்கள் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரு மகள்கள் மருமகன் என கைதுகள் தொடர்கின்றது.