யாழ்ப்பாணத்தில் 240 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள் , பொதிகளை எடுக்க வருபவரை கைது செய்யும் நோக்குடன் நீண்ட நேரமாக பற்றைக்காட்டினுள் பதுங்கி இருந்துள்ளனர்.

 காவல்துறையினா்  பதுங்கி இருப்பதனை அறியாது , கஞ்சா பொதிகளை எடுக்க சென்றவரை காவல்துறையினா் மடக்கி பிடித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர் மாதகல் பகுதியை சேர்ந்தவர் எனவும் , கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளையும் , மேலதிக நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினா் தெரிவித்தனர்