” எங்கள்  தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க, இளங்குமரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்,

தெல்லிப்பளை வைத்திய நிர்வாகி தேவநேசனுக்கு எதிராக  முன் வைக்கப்பட்ட   அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக  உடனடியாக விசாரணைக் குழுவை நியமிப்பதுடன், புற்றுநோயாளர்களுக்குரிய  தரமான இலவச சிகிச்சை அளிப்பதில்  செயற்கையாக இடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை  நீக்குவதுடன்,   வைத்திய நிபுணர்கள்  மற்றும் வைத்தியர்கள்  இதர சுகாதார   ஊழியர்கள் அனைவரும்  பாதுகாப்பான சூழ்நிலையில்  சேவையாற்றுவதற்கும் ஏதுவான வகையில்  நிர்வாக மாற்றத்தை  வெகு விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .