தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய நல்லூர் தவிசாளர்

நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று , அஞ்சலி செலுத்தி , ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். 

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 

அதன் போது , மயூரன் தவிசாளராக ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். 

தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து , நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு தீபமேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தியதுடன் , ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.