யாழ்ப்பாணம் குருநகர்  பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்  காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்தவர்கள் வெடிமருந்துகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடிமருந்துகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் காவல நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love

  குருநகர்சட்ட நடவடிக்கைவெடிமருந்துகள்