5
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.