ஷுப்மான் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவது நியாயமா? – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காத்திருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டைகர் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்குப் பிறகு ஐந்தாவது இளைய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் (வலது) இருப்பார்எழுதியவர், ஷார்தா உக்ரா பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசிக்காக 16 நிமிடங்களுக்கு முன்னர்

இன்றைய விளையாட்டு சூழலில், கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவது சரியானதாக தெரியவில்லை.

இருப்பினும், 2014ஆம் ஆண்டில் திடீரென மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு உடனடியாக விராட் கோலிக்கு வழங்கப்பட்ட டெஸ்ட் அணியின் தலைமைப் பதவியுடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், சிலபல வித்தியாசங்கள் இருப்பதை உணரமுடியும்.

2014ஆம் ஆண்டில் விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, ​​அவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,855 ரன்கள் எடுத்திருந்தார். ஆறு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்கள் எடுத்திருந்த கோலியின் சராசரி ரன்ரேட் 39.46 ஆக இருந்தது, அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே.

ஜூன் 20ஆம் தேதி ஹெடிங்லியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக களம் இறங்கும்போது ஷுப்மான் கில்லின் வயது 25 ஆண்டு 285 நாட்களுமாக இருக்கும். கேப்டன்சியைப் பொறுத்தவரை, டைகர் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி (ஒரே ஒரு டெஸ்டுக்கு மட்டுமே தலைமை தாங்கியவர்) ஆகியோருக்குப் பிறகு ஐந்தாவது இளைய வீரராக ஷுப்மான் கில் இருப்பார்.

ஷுப்மான் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,893 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் ஐந்து சதங்களையும் ஏழு அரை சதங்களையும் அடித்து சராசரி ரன்ரேட் 35.05 வைத்திருக்கிறார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார் என்றாலும், டெஸ்ட் கேப்டன் என்ற பதவிதான் கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் ஆக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது.

பட மூலாதாரம், Getty Images

கோலி தன்னை மிகவும் வெற்றிகரமான கேப்டனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். விராட் கோலியின் இந்த அபரிமிதமான எழுச்சியை கில் நேரில் கண்டிருக்கிறார்.

அதாவது, சிறந்த இந்திய கேப்டனாக மாற விரும்பினால், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவைப்படும் கடினமான அம்சங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஷுப்மான் கில் நன்கு அறிவார்.

கில் இளைஞராக இருப்பதால் சாதிக்க போதுமான நேரம் அவருக்கு இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்றபோது இளம்வயது என்ற அம்சம் அவருக்கு சாதகமாக இருந்தது.

தற்போது, ​​இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மட்டுமே கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், “ஒன்று அல்லது இரண்டு சுற்றுப்பயணங்களுக்கான கேப்டனைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் முதலீட்டை நாங்கள் செய்ய விரும்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துடன், இரண்டு வருட கால உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் தொடங்கிவிடும்.

ஒரு வகையில் பார்க்கப்போனால், கில் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதைப் பார்க்க அதிரடியாக களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

கேப்டன்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கோலியின் ஆக்ரோஷம், மற்றும் ரோஹித் சர்மாவின் நிதானமான அணுகுமுறையுடன் ஒப்பிடும் ோது, கில்லின் ஆளுமை பிறரிடம் இருந்து மாறுபட்டதாக இருக்கலாம். கோலி மற்றும் ரோஹித் இருவரின் சில குணங்களும் கில்லிடம் உள்ளன என்பதும் உண்மையே.

ரோஹித் போன்ற அமைதியான நடத்தையுடனும், கோஹ்லி போன்ற சுய விழிப்புணர்வுடனும் செயல்படுகிறார் ஷுப்மான் கில்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கில் இருந்து வருகிறார்ஐபிஎல் கேப்டன் கில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குப் பின் தற்போதைய சூழ்நிலையில், கில்லின் பேட்டிங் திறனைத் தவிர, தேர்வாளர்கள் அவரிடம் கண்ட மிக முக்கியமான விஷயம் அவரது ஆளுமையில் உள்ள ‘நிலைத்தன்மை’ ஆகும்.

இருபது ஓவர் கிரிக்கெட்டில் அடைந்த வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றியுடன் ஒப்பிடுவது சரியல்ல என்றாலும், டி20 போட்டியில் ஒவ்வொரு பந்துக்கும் கேப்டன் எதிர்வினையாற்ற வேண்டும். இது நிச்சயமாக அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டிய ஒரு கேப்டனின் செயல்திறனைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.

ஷுப்மான் கில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இரண்டாவது ஐபிஎல் சீசனில் களம் இறங்கியிருந்தார்.

ஆனால் கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் போலல்லாமல், கில்லின் பேட்டிங்கில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் அவரது கேப்டன் என்ற பொறுப்பு ஏற்படுத்தவில்லை.

இந்த ஆண்டு, கில் தனது ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் மீதான தனது கட்டுப்பாட்டைப் பேணியது மட்டுமல்லாமல், வெற்றி தோல்வி என எந்தவொரு சூழ்நிலையிலும், நிதானமாகவும் புரிந்துணர்வுடனும் செயல்பட்டார்.

ஆனால், ஷுப்மான் கில்லுக்கு உண்மையான சோதனை கிரிக்கெட்டின் கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் தொடங்க உள்ளது.

ஐபிஎல்லில் வெற்றிகரமான வீரராக இருந்தபோதிலும், பச்சை குத்தாமல், தாடி இல்லாமல் ஷுப்மான் கில் பளிச் என்ற தோற்றத்துடன், அந்த கால கிரிக்கெட் வீரரைப் போலவே இருக்கிறார்.

ஊடகங்கள் மற்றும் கேமராவின் முன் இல்லாமல் மைதானத்தில் செயல்படுவது தான் அவருடைய உண்மையான வேலை. கடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரில், கில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடினார். ரோஹித் சர்மா சிட்னி டெஸ்டில் (கடைசி டெஸ்ட்) பங்கேற்காமல் இருக்க முடிவு செய்தபோது, ​​கில் மீண்டும் களம் இறங்கினார்.

கடந்த டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கில் சீக்கிரமே ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில், மதிய உணவுக்கு சற்று முன்பு கில்லை தனது சுழலில் சிக்க வைத்து நாதன் லியோன் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில், நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் பியூ வெப்ஸ்டரின் பந்தில் கில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு நான்கே மாதங்களில் ஷுப்மான் கில்லை டெஸ்ட் கேப்டனாக மாற்றுவது என்பது ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் திசையையும் மாற்றும் ஒரு முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்திய அணியின் கவலை

முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே, கில் “முதலில் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். காயம்பட்டபோதிலும், அவர் இப்போது ஒரு கேப்டனாக குறைந்தது பத்து இன்னிங்ஸ்களாவது விளையாட வேண்டும்.

இங்கிலாந்தில் விளையாடும்போது கில்லின் செயல்திறன் மோசமாக இருக்கிறது. அங்கு ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 14.66 சராசரியுடன் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இங்கிலாந்தில், கே.எல். ராகுல் 18 இன்னிங்ஸ்களில் 34.11 சராசரியுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். அதே நேரத்தில், துணை கேப்டன் ரிஷப் பந்த் 15 இன்னிங்ஸ்களில் 34.06 சராசரியுடன் 511 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் பந்த் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார்.

இந்த இருவரையும் தவிர, அணியில் உள்ள வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் அனுபவமோ வெற்றியோ இல்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு இயல்பாகவே கவலை ஏற்படுத்தும் அம்சமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2014ஆம் ஆண்டு கோலி பதவியேற்றபோது அவர் கிரிக்கெட்டின் ஒரேயொரு வடிவத்திற்கு மட்டுமே கேப்டனாக இருந்ததைப் போலவே ஷுப்மான் கில்லும் தற்போது டெஸ்ட் கிரிகெட்டிற்கு மட்டுமே கேப்டனாக உள்ளார்கில்லுக்கு சாதகமாக உள்ள காரணிகள் யாவை?

தற்போது ஷுப்மானுக்கும் இந்தியாவுக்கும் இரண்டு நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன. வெளிப்புற கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களின் காரணமாக பேட்ஸ்மேன்கள் தங்கள் நிலையை விட்டு முன்னேறி ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டம் வரும். இந்த ஊக்குவிப்புக் கட்டத்தில் ஷுப்மான் இருக்கிறார். விராட் கோஹ்லிக்கும் இதேபோன்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ​​2014ஆம் ஆண்டு கோலியைப் போலவே, கில்லும் ஒரே ஒரு வடிவத்திற்கு மட்டுமே கேப்டனாக உள்ளார்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால், வேகப்பந்து வீச்சாளர்களான ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு, மாற்றத்தின் கட்டத்தில் இருக்கிறது.

கேப்டனாக களம் இறங்கும் ஷுப்மான் கில்லின் ஆரம்பத் தொடரில், அவருக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனான ஒருங்கிணைப்பு மிக முக்கியமான விஷயம் ஆகும்.

ரோஹித் மற்றும் கம்பீர் இடையிலான ஒருங்கிணைப்புக்காக அபிஷேக் நாயர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது நாயர் போய்விட்டார், அவர் இல்லாத நிலையில் கம்பீருடன் ஒத்துப்போக கில் தனது சொந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனான கில்லின் ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறதுவங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் கம்பீரின் மேலாண்மை மற்றும் முடிவெடுக்கும் பாணியைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பு கில்லுக்குக் கிடைத்தது.

தோல்விகளுக்குப் பிறகு, கிரிக்கெட்டில் மாற்றத்திற்கான கட்டம் தொடர்கிறது என்பதையும் ஷுப்மான் கில் அறிந்திருப்பார்.

முதலில் கேப்டன் வெளியேறினார், பின்னர் பயிற்சியாளர் வெளியேறினார்… இந்தியா தனது கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது.

இந்தத் தோல்விகளுக்குப் பிறகு, கேப்டன் வெளியேறிவிட்டார், இப்போது வாள் பயிற்சியாளர் கம்பீரின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ​​ஷுப்மான் கில் கேப்டன்சியில் தன்னை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு