Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி மனிதப் புதைகுழியினை மேலும் 45 நாட்கள் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ள யாழ் நீதிவான் நீதிமன்றம் கட்டளையை ஆக்கியுள்ளது.
நாளையுடன் ஆரம்ப ஆய்வு நிறைவுபெறுகின்றது, மேலும் 45 நாட்கள் அகழ்வு தொடர்ந்து மேற்கொள்வதற்கு நீதி அமைச்சிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு திட்ட பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை வழங்கப்டுள்ளது .
இந்த வழக்கில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் அபிப்பிராய அறிக்கையின் பிரகாரம் மூன்று விதமான விடயங்கள் இருவராலும் முன்வைக்கப்பட்டது.
• குறிக்கப்பட்ட அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 மீற்றர் அடி அளவிலேயே மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்த கூடியதாக உள்ளது .
•குழப்பமான சூழலில் முறையற்ற வகையில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது.
•ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை.
இது சட்டவிரோதமான இரகசியமான புதைகுழியாக இருக்கலாம் எனவும் தொடர்ந்தும் பல மனித எச்சங்கள் அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த மனித புதைகுழியை 45 நாட்களுக்கு அகழவேண்டும் என்ற பரிந்துரை பேராசிரியர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் அபிப்பிராய அறிக்கையின் அடிப்படையில் , அகழ்வு இடம்பெற்றுவரும் இடம் சந்தேகத்திற்குரிய அல்லது இரகசிய மனிதப் புதைகுழித் தளமாக இருக்கலாம் என்று நீதிமன்றம் கருதியதன் அடிப்படையில்
அகழ்வாராய்ச்சிக்கு 45 நாள் நீட்டிப்பை நீதிமன்றம் அங்கீகரித்தது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களினுடைய செய்மதி படத்தின் அடிப்படையில் புதைகுழி அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்துக்கு அருகிலுள்ள மற்றொரு சாத்தியமான தளத்திலும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று மன்றில் குறிப்பிட்டுள்ளார்