உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சியிடம் ஆதரவு கோரியிருக்கின்றோம். கட்சியுடன் பேசி முடிவைச் சொல்வதாக கட்சியில் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியின் ஆதரவு கிடைத்தால் அனேகமான சபைகளில் தமிழரசுக்கட்சி நிர்வாகம் அமைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கட்சியின்  பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழரசு மற்றும் தமிழ் தேசியப்பேரவையென இரண்டு தரப்புக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தாலும் இலங்கை தமிழரசுக் கட்சியே நேரடியாக எங்களை சந்தித்து உத்தியோகபூர்வமாக கலந்துரையாடியிருக்கிறது.மற்றைய தரப்பான தமிழ் தேசியப்பேரவை சந்திக்க கோரிக்கை முன்வைத்தபோதும் அவர்களுடன் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. எனினும் விரைவில் சந்திக்க வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள் என ஈபிடிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஈபிடிபியோடோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள். தமிழ்த்தேசிய பேரவை சுயாதீனமாகவும் இயங்கும்.நாற்காலிகளை அலங்கரிப்பது நோக்கமல்ல.சித்தார்த்தன் தமிழ் தேசியப்பேரவை சார்பில் டக்ளசை அணுகியது கூட்டில் உள்ள எவருக்கும் தெரியாதென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.