வவுனியா பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு நீர்த் தேக்கத்தில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதைத் தொடர்ந்து அவர் இன்று (12.11) இரவு தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில,வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம், பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் இன்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும், பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படும் வரை குறித்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குளத்து மீனிற்கு தடை!
8
previous post