யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார்.

அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், 20 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (03.06.25) செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.

அதனை அடுத்து , 14 நாட்களுக்கு இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.