வடகிழக்கில் உள்ளுராட்சி சபைகளில் ஆளுந்தரப்பு ஆட்சியமைக்க முடியாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆகவே ஏனையோர் ஆட்சியமைப்பது தொடர்பில் சரியான முடிவு எடுக்கப்படுமென சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்காலத்தில் தேர்தல்களை எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையினை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளும் இன்று பணிகளை ஆரம்பித்துள்ளன.அதேபோன்று முல்லைதீவின் கரைதுறைப்பற்று பிரதேசசபையும் தனது பெரும்பான்மையுடன் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் தொங்கு நிலையிலுள்ள யாழ்ப்பாண மாநகரசபை உள்ளிட்ட சபைகளில் தமிழ்த் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது இணைந்து போட்டியிடும் என ஒப்பந்தத்தின் பின் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அம்முயற்சி வெற்றிபெறுமாயின் யாழ்ப்பாணத்தில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட சபைகளை தமிழரசுக்கட்சி இழக்கவுள்ளது.