பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாயின் கைப்பையை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது...

பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாயின் கைப்பையை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையை திருடிய சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேருந்துக்காக பெண் சிப்பாய் காத்திருந்த வேளை அவரது கைப்பையை திருடிக்கொண்டு சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளார்.  கைப்பையினுள் ஒரு பவுண் நகை , பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணப்பட்ட நிலையில் , அது தொடர்பில் சிப்பாய் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்படு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர்  சந்தேகநபர் கொடிகாமம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறைக்குழு சந்தேக நபரை கைது செய்தனர்.  சந்தேகநபரை கைது செய்த வேளை அவரது உடைமையில் இருந்து ஐஸ் போதைப் பொருளையும்  காவல்துறையினர் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related Posts