4
மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் காவல்துறையினா் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர். அரசடி வீதி ஊடாக மணல் மண்ணுடன் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை காவல்துறையினா் மடக்கி சோதனை செய்த வேளை, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி செல்வதனை காவல்துறையினா் கண்டறிந்தனர். அதனை அடுத்து , சாரதியை கைது செய்த காவல்துறையினா் , டிப்பர் வாகனத்தையும் மணலுடன் மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.