யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர்  இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.  காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  இருவரையும் கைது செய்தகாவல்துறையினர் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து 270 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயதுடைய மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் , இருவரையும்  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love

  கைதுபோதை மாத்திரைகள்விசாரணை