Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தை குறிவைத்து இன்று புதன்கிழமை (மே 21) நடத்தப்பட்ட தற்கொலைக் கார் குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
குஜ்தார் துணை ஆணையர் யாசிர் இக்பால் கூறுகையில்,
பேருந்து இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றது.
இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை ஆனால் சந்தேகம் பலூச் இன பிரிவினைவாத அமைப்புகள் மீது குறிப்பாக மாகாணத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை அடிக்கடி தாக்கி வரும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) மீது விழ வாய்ப்புள்ளது. பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார். அப்பாவி குழந்தைகளை குறிவைத்து எதிரி காட்டுமிராண்டித்தனத்தைச் செய்தார். இத்தகைய மிருகங்கள் எந்த கருணைக்கும் தகுதியற்றவை என்று கூறினார்.
பலுசிஸ்தானில் உள்ள கில்லா அப்துல்லாவில் உள்ள ஒரு சந்தைக்கு அருகில் இதேபோன்ற கார் குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இன்று புதன்கிழமை குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
மார்ச் மாதத்தில், மாகாணத்தில் ஒரு பயணிகள் தொடருந்து மீது பலூசிஸ்தான் விடுதலை இராணுவக் கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் படையினர்.
பலுசிஸ்தானில் பிரிவினைவாதிகள் பொதுவாக இராணுவம் அல்லது காவல்துறையினரை குறிவைக்கும் அதே வேளையில், பள்ளிக் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் அரிதானவை என்றாலும் பிற பிராந்தியங்களிலும் நடந்துள்ளன. இதில் 2014 ஆம் ஆண்டு பெஷாவரில் உள்ள ஒரு இராணுவப் பள்ளியின் மீது தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 154 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என்பது நினைவூட்டத்தக்கது.