யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தவில் வித்துவான் திடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.   ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி திடீரென சுகவீனமடைந்த நிலையில் , 19ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உடல் உறுப்புக்களில் பாதிப்பு ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.