Homeசெய்திகள்

அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை!

 வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை சபை த

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு
“கேசவ விநாயகத்துக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை” – அண்ணாமலை விளக்கம்
ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!
யோஷித மற்றம் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சிறீதரன் சவால்:கோத்தா விசாரணைக்கு!


 வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை சபை தலைவர எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள மக்கள்.அவர்கள் அந்த மண்ணை எடுத்து சென்றதால் ஏற்பட்ட கோபத்தில், அந்த வீட்டை இலங்கை இராணுவம் முற்றாக இடித்து அகற்றி வெறும் மணல் தரையாக மாற்றினர்.இந்நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் உலகத்தலைவர்கள் பலரின் வீடுகள் நினைவுச்சின்னங்களாக மாற்றப்பட்டதை போல தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டையும் அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும் அதில் கட்டப்படுவதாக கூறப்படும் நூலகத்துக்கு எந்த தடையும் இல்லை.அதில் தலைவர் பிரபாகரனின் வீட்டின் மாதிரியையும், அவரின் பெற்றோர்களின் திருவுருவச்சிலைகளையும் நிறுவவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளோம்” எனவும் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.